சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்திருக்கும் அணிக்கு வாக்குத் தாருங்கள்! உலைக்குப் பயந்து நரகலில் விழுந்த கதையாக, செத்தபாம்பு காங்கிரசை அடிக்கிறேன் என்று அதிமுக பார்ப்பனத் தலைமைக்கு பல்லவி பாடாதீர்! அல்லல் படாதீர்!

Wednesday, April 6, 2011


கோபம் அறிவை மறைக்கும் என்ற அரிச்சுவடி தெரியாதா உங்களுக்கு?

’ஈழத்தை அழித்த காங்கிரசை ஒழிக்கிறேன்’ பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அதனினும் கொடிய விசத்தை, தமிழகத்தை அழிக்கும் பார்ப்பனிய பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து அமர்த்தத் துடிக்கிறீர்களே! கொஞ்சம் உளச் சுத்தியோடும், அறிவு நாணயத்தோடு சொல்லுங்கள்! ஈழத்தை காங்கிரசு மட்டும் அழித்ததா? அல்லது இவர்களைப் பயன்படுத்தி பார்ப்பனியம் அழித்ததா? தனித் தமிழீழம் அமையக் கூடாது என்று துடிப்பவர்கள் யார்? ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் உணர்வு என்ன இவ்விசயத்தில்! தமிழர்களுக்கென்று நாடு அமைவதை விரும்பாதவர்கள் பார்ப்பன நலம் காக்கத் துடிப்போர் அல்லவா?

63 சீட்டுக்காகக் கூட்டணியை விட்டு வெளியில் வரத் தயாரான கலைஞர், ஈழத் தமிழர் அழிவின் போது காங்கிரசு கூட்டணியை விட்டு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கிறார் அண்ணன் சீமான்!
எப்படி இருந்திருக்கும்? 
வெளியில் வந்து பினாத்த முடியாமல் உள்ளே முடங்கியிருப்பார் சீமான்! 
67-இல் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்திருக்கும். அ.தி.மு.க.வின் ஆதரவோடு ஆட்சியில் காங்கிரஸ் அமர்ந்திருந்தால் அழக்கூட உரிமையில்லாமல் அடக்கப்பட்டிருப்போம்! வெளியில் உலாத்தி, மூச்சைப் பிடித்து கையை உயர்த்தி கலைஞரைத் திட்ட முடியாது. 

இன்று நீங்கள் மலர வைக்கத் துடிக்கும் இலைக்கார அம்மா வந்தால் முதல் இடுப்பொடிப்பு உங்களுக்குத் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். வெற்று முழக்கங்களும், அரசியல் தெளிவற்ற தன்மையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தமிழின உணர்வை இல்லாது அழித்தொழித்துவிடும்..
ஆரியத்தின் பகடைக் காய்களே! முதலில் வெட்டுப் படப்போவது நீங்கள் தான் என்பது புரிகிறதா? 
உடனிருந்து உற்றுளி உதவியோருக்கே உட்கார இடம் கிடைக்கவில்லை. 

சொன்ன சொல்லுக்கும், விட்ட காற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற உணர்வோடு திரியும் அம்மையாரின் கொடுக்கு  பிடித்து அலைகின்றீர்களே! உங்கள் பணிக்கும், தீட்டிய மரத்தில் கூர் பார்க்கத் துடிக்கும் கோடரிக் காம்பின் நுனிக்கும் என்ன வேறுபாடு? 

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றால், மீண்டும் அவரது அரசியல் வாழ்க்கை எழுச்சி பெறுதல் என்பது இயலாத காரியம். அப்படி ஜெயலலிதா தமிழக அரசியலை விட்டு வெளியேறினால், மீண்டும் ஒரு பார்ப்பனத் தலைமையைக் கொண்டு வந்து அதிகாரப் பீடத்தில் அமர்த்துவது கடினம் என்ற உண்மையை உணர்ந்த காரணத்தால் எப்படியாவது ஜெயலலிதாவைக் கரை சேர்த்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தன்னாலான அனைத்து உபாயங்களையும் செய்து பார்க்கிறது ஆரியம்.

அத்தனை பார்ப்பன ஊடகங்களும் கோவணத்தையும் அவிழ்த்துவிட்டு அம்மண ஆட்டம் போடுகின்றன. ஆனந்த விகடனும் தன்னுடைய நடுநிலை வேடத்தையெல்லாம் உரித்து எறிந்துவிட்டு, பார்ப்பனக் கோர முகம் காட்டி நிற்கிறது.

தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் என்று உணர்வாளர்களெல்லாம் ஓரணி! எதிரணியில் சொல்லிக் கொள்வதற்கென இருந்த ஒரே இயக்கமான ம.தி.மு.கவும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டுவிட்டது. போராடிக் கட்சியை நடத்தக் காரணம் கிடைக்காத பொதுவுடைமை இயக்கங்கள் ஈழத் தமிழர் பிரச்சினையாவது மோட்சம் கிடைக்குமாவெனப் பார்த்து நிற்கின்றனவே தவிர வேறில்லை.. 

என்றைக்கும் தமிழின உணர்வுக்கு எதிர் நிலை எடுக்கும் அத்தனை பார்ப்பனர்களும் ஓரணியில் - கலைஞரை வீழ்த்தத் துடிக்கின்றனர். கலைஞர் வெளிப்படையாக பார்ப்பன எதிர்ப்பை பேசத் தொடங்கிய பின், சு.சாமி தன்னை எதிர்க்கும் ஓட்டுகளும் ஜெயலலிதாவிற்குக் கிடைக்க வேண்டுமென நினைக்கிறார்.

அத்தனைப் பார்ப்பானுக்கும் உச்சத்தில், அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியைக் கைது செய்து சிறையில் அடைத்தவரே ஆயினும், தங்கள் பார்ப்பனத் தலைமையை பலி கொடுக்க விரும்பாமல், பார்ப்பன சங்கம் உள்ளிட்ட அனைத்தும் அணிவகுக்கின்றன ஜெயாவின் பின்னால்..!

தமிழர்களே உங்கள் நிலை என்ன? பார்ப்பனர்கள் மூட்டிவிடும் ஊடக நெருப்புக்குள் குளிர் காயப் போகிறீர்களா? அது உங்களை எரித்துவிடும். எச்சரிக்கிறோம்.

மக்கள் நல அரசு என்கிற மாபெரும் வெற்றிச் சரிதத்தை இதுவரை தமிழகத்தில் இல்லை என்னும் அளவுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதி,  
காங்கிரஸ் என்ற ஒற்றைக்காரணத்தைச் சொல்லி தி.மு.க அணியை நிராகரிப்பது மாபெரும் வரலாற்றுத்தவறுக்கு வழிவகுக்கும்.

காங்கிரசின் அழிவை நீங்கள் தரத்தேவையில்லை. அது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். அதற்கென்று அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரசு பற்றியா அமைகிறது உங்கள் பேச்சு... இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை வைகோ பேசியதைப் போல, காங்கிரசை விட, அதிகமாக தி.மு.க.வைத் தாக்குகிற உங்களை’ மவுத் பீஸ்’ஆக மட்டுமே பார்க்கிறது ஆரியம். காங்கிரசோ, பி.ஜெ.பியோ மத்தியில் இருக்கும் யாரையும் ஆள்வதும், வழிநடத்துவதும் பார்ப்பனியம் என்கிற கொடும் கூட்டணி என்பதை மறந்துவிட்டு, மேம்போகக் காங்கிரசை அழித்தால் தீர்வு கிடைக்கும் என்று திமிறாதீர்!

காங்கிரஸ் எதிர்ப்பு என்பதைவிட தி.மு.க எதிர்ப்பு என்பதில் முன்னணியில் நிற்கும் உங்களைக் கொம்பு சீவிவிட்டு நம் இனத்தையே நோக்கித் திருப்புகின்றது ஆரியம். புகழ் வெறி கொண்டு அலையும் சிலரின் பிழைப்பு வாதத்திற்குப் பலியாகாதீர்! எந்தக் காலத்திலும் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரசு செத்த பாம்பு... அதை அடித்து வெற்றி பெற்றவராக உங்களைக் காட்டிக்கொள்வதைவிட, சீறிக்கொண்டிருக்கும் பார்ப்பன நச்சரவைப் பிடியுங்கள்.

2006 தேர்தலில் சில இடங்களுக்காக அணிமாறி, தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பையும் குறைத்து, தன் இடத்தையும் இழந்து நின்று, பின்னாளில் காங்கிரசின் ஆதரவை அவசியம் பெற்றாக வேண்டிய சூழலில் தி.மு.க.வைத் தள்ளி அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சினையிலும் தமிழர்களை ஓரணியில் நிற்கவிடாமல், குறுக்குச் சால் ஓட்டி, வரலாற்றுப் பழிக்கு இலக்காகிவிட்ட ம.தி.மு.க-வைப் போன்ற அழிவு முடிவைத் தேடாதீர்கள்!

நலத்திட்டங்களுடன் சமூக நீதிக்கு உழைக்கும் அரசை ஒழித்துவிட்டு, அப்படியே தலைகீழ்த் தனமாக, தானடித்த மூப்பாகக் காட்டாட்சி நடத்தும் ஜெயாவுக்கான உங்கள் ஆதரவு என்பது தமிழன் தலையில், தமிழ் உணர்வுப் பேரைச் சொல்லி, நெருப்பள்ளிக் கொட்டுதற்குச் சமமாகும்.

சிந்திப்பீர்! வெற்று உணர்ச்சியும், பழிவாங்கும் வெறியும் தேக்கி, மீண்டும் ஒரு அவலத்தை விலைக்கு வாங்காதீர்கள்! நட்பு முரணுக்கும், பகை முரணுக்குமான வேறுபாட்டை உணராமல் முடிவெடுக்காதீர்! நாம் ஒன்றிணைந்து எதிரியை வீழ்த்துவது முறையா? எதிரியைக் கோட்டைக்குள் அனுமதித்து, நம்மவரைச் சாய்த்தல் முறையா?

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!” என்று பகைவரை விரட்டத் திரளுங்கள்! ஓரணியில் நின்று ஒன்றாய் வென்றால் எந்த எதிரியும் நம்மை வெல்ல முடியாது. இதுநாள்வரை இழைத்த தவறை இனியும் தொடராதீர்!

திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்திருக்கும் அணிக்கு வாக்குத் தாருங்கள்! உலைக்குப் பயந்து நரகலில் விழுந்த கதையாக, செத்தபாம்பு காங்கிரசை அடிக்கிறேன் என்று அதிமுக பார்ப்பனத் தலைமைக்கு பல்லவி பாடாதீர்! அல்லல் படாதீர்!

நன்றி: Prince Ennares Periyar 

Read more...

சிறுத்தைகளின் தளபதிகளில் ஒருவரான திட்டக்குடி வேட்பாளர் சிந்தனைசெல்வனின் மக்கள் செல்வாக்கு.

Friday, April 1, 2011




Read more...

சூரியக்கூட்டணிக்கு வாக்களிப்போம்! வாரீர் என வாக்காளர்களை அழைக்கும் திருமா...



சுடுக்குங்கள்..................................
http://www.thiruma.info/2011/03/blog-post_31.html

Read more...

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சிறுத்தைகாளின் இணைய தளங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது பாருங்கள் அந்த பொலிவானத் தோற்றத்தினை....


திருமா.இன்போ ஆகா ........................பாருங்கள்

http://www.thiruma.info/

Read more...

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு சிலர் ஒரு சில தொகுதிகளில் போட்டி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறு தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒரு சிலர் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு சிலர் அவ்வாறு போட்டி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. அவ்வாறு திரும்பப் பெறாமல் வேட்பாளர்களாகப் போட்டியிடும்

1) விருத்தாசலம் மருத்துவர் சுலோசனா என்ற சுடர்மதி அய்யாச்சாமி,

2) இராஜன் என்கிற குடந்தை அரசன், 3) சீர்காழி குமாரராஜா,

4) காட்டுமன்னார் கோவில் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் கட்சியினர் தேர்தல் வேலை செய்யவோ, எந்தவித அரசியல் தொடர்புகள் வைத்துக்கொள்ளவோ கூடாதென அறிவுறுத்தப்படுகின்றனர்..


மேலும் செய்திகள்............


http://www.thiruma.in/2011/04/blog-post_01.html

Read more...

தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக்காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.-தொல். திருமாவளவன்

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 




மேலும் செய்திகள்............
http://www.thiruma.in/2011/04/blog-post.html

Read more...

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும்திமுக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிற நிலையில். நெடுஞ்காடு (தனி) தொகுதி சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திரு. அரசு வணங்காமுடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Friday, March 25, 2011


Read more...

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP