சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்திருக்கும் அணிக்கு வாக்குத் தாருங்கள்! உலைக்குப் பயந்து நரகலில் விழுந்த கதையாக, செத்தபாம்பு காங்கிரசை அடிக்கிறேன் என்று அதிமுக பார்ப்பனத் தலைமைக்கு பல்லவி பாடாதீர்! அல்லல் படாதீர்!

Wednesday, April 6, 2011


கோபம் அறிவை மறைக்கும் என்ற அரிச்சுவடி தெரியாதா உங்களுக்கு?

’ஈழத்தை அழித்த காங்கிரசை ஒழிக்கிறேன்’ பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அதனினும் கொடிய விசத்தை, தமிழகத்தை அழிக்கும் பார்ப்பனிய பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து அமர்த்தத் துடிக்கிறீர்களே! கொஞ்சம் உளச் சுத்தியோடும், அறிவு நாணயத்தோடு சொல்லுங்கள்! ஈழத்தை காங்கிரசு மட்டும் அழித்ததா? அல்லது இவர்களைப் பயன்படுத்தி பார்ப்பனியம் அழித்ததா? தனித் தமிழீழம் அமையக் கூடாது என்று துடிப்பவர்கள் யார்? ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் உணர்வு என்ன இவ்விசயத்தில்! தமிழர்களுக்கென்று நாடு அமைவதை விரும்பாதவர்கள் பார்ப்பன நலம் காக்கத் துடிப்போர் அல்லவா?

63 சீட்டுக்காகக் கூட்டணியை விட்டு வெளியில் வரத் தயாரான கலைஞர், ஈழத் தமிழர் அழிவின் போது காங்கிரசு கூட்டணியை விட்டு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கிறார் அண்ணன் சீமான்!
எப்படி இருந்திருக்கும்? 
வெளியில் வந்து பினாத்த முடியாமல் உள்ளே முடங்கியிருப்பார் சீமான்! 
67-இல் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்திருக்கும். அ.தி.மு.க.வின் ஆதரவோடு ஆட்சியில் காங்கிரஸ் அமர்ந்திருந்தால் அழக்கூட உரிமையில்லாமல் அடக்கப்பட்டிருப்போம்! வெளியில் உலாத்தி, மூச்சைப் பிடித்து கையை உயர்த்தி கலைஞரைத் திட்ட முடியாது. 

இன்று நீங்கள் மலர வைக்கத் துடிக்கும் இலைக்கார அம்மா வந்தால் முதல் இடுப்பொடிப்பு உங்களுக்குத் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். வெற்று முழக்கங்களும், அரசியல் தெளிவற்ற தன்மையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தமிழின உணர்வை இல்லாது அழித்தொழித்துவிடும்..
ஆரியத்தின் பகடைக் காய்களே! முதலில் வெட்டுப் படப்போவது நீங்கள் தான் என்பது புரிகிறதா? 
உடனிருந்து உற்றுளி உதவியோருக்கே உட்கார இடம் கிடைக்கவில்லை. 

சொன்ன சொல்லுக்கும், விட்ட காற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற உணர்வோடு திரியும் அம்மையாரின் கொடுக்கு  பிடித்து அலைகின்றீர்களே! உங்கள் பணிக்கும், தீட்டிய மரத்தில் கூர் பார்க்கத் துடிக்கும் கோடரிக் காம்பின் நுனிக்கும் என்ன வேறுபாடு? 

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றால், மீண்டும் அவரது அரசியல் வாழ்க்கை எழுச்சி பெறுதல் என்பது இயலாத காரியம். அப்படி ஜெயலலிதா தமிழக அரசியலை விட்டு வெளியேறினால், மீண்டும் ஒரு பார்ப்பனத் தலைமையைக் கொண்டு வந்து அதிகாரப் பீடத்தில் அமர்த்துவது கடினம் என்ற உண்மையை உணர்ந்த காரணத்தால் எப்படியாவது ஜெயலலிதாவைக் கரை சேர்த்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தன்னாலான அனைத்து உபாயங்களையும் செய்து பார்க்கிறது ஆரியம்.

அத்தனை பார்ப்பன ஊடகங்களும் கோவணத்தையும் அவிழ்த்துவிட்டு அம்மண ஆட்டம் போடுகின்றன. ஆனந்த விகடனும் தன்னுடைய நடுநிலை வேடத்தையெல்லாம் உரித்து எறிந்துவிட்டு, பார்ப்பனக் கோர முகம் காட்டி நிற்கிறது.

தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் என்று உணர்வாளர்களெல்லாம் ஓரணி! எதிரணியில் சொல்லிக் கொள்வதற்கென இருந்த ஒரே இயக்கமான ம.தி.மு.கவும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டுவிட்டது. போராடிக் கட்சியை நடத்தக் காரணம் கிடைக்காத பொதுவுடைமை இயக்கங்கள் ஈழத் தமிழர் பிரச்சினையாவது மோட்சம் கிடைக்குமாவெனப் பார்த்து நிற்கின்றனவே தவிர வேறில்லை.. 

என்றைக்கும் தமிழின உணர்வுக்கு எதிர் நிலை எடுக்கும் அத்தனை பார்ப்பனர்களும் ஓரணியில் - கலைஞரை வீழ்த்தத் துடிக்கின்றனர். கலைஞர் வெளிப்படையாக பார்ப்பன எதிர்ப்பை பேசத் தொடங்கிய பின், சு.சாமி தன்னை எதிர்க்கும் ஓட்டுகளும் ஜெயலலிதாவிற்குக் கிடைக்க வேண்டுமென நினைக்கிறார்.

அத்தனைப் பார்ப்பானுக்கும் உச்சத்தில், அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியைக் கைது செய்து சிறையில் அடைத்தவரே ஆயினும், தங்கள் பார்ப்பனத் தலைமையை பலி கொடுக்க விரும்பாமல், பார்ப்பன சங்கம் உள்ளிட்ட அனைத்தும் அணிவகுக்கின்றன ஜெயாவின் பின்னால்..!

தமிழர்களே உங்கள் நிலை என்ன? பார்ப்பனர்கள் மூட்டிவிடும் ஊடக நெருப்புக்குள் குளிர் காயப் போகிறீர்களா? அது உங்களை எரித்துவிடும். எச்சரிக்கிறோம்.

மக்கள் நல அரசு என்கிற மாபெரும் வெற்றிச் சரிதத்தை இதுவரை தமிழகத்தில் இல்லை என்னும் அளவுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதி,  
காங்கிரஸ் என்ற ஒற்றைக்காரணத்தைச் சொல்லி தி.மு.க அணியை நிராகரிப்பது மாபெரும் வரலாற்றுத்தவறுக்கு வழிவகுக்கும்.

காங்கிரசின் அழிவை நீங்கள் தரத்தேவையில்லை. அது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். அதற்கென்று அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரசு பற்றியா அமைகிறது உங்கள் பேச்சு... இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை வைகோ பேசியதைப் போல, காங்கிரசை விட, அதிகமாக தி.மு.க.வைத் தாக்குகிற உங்களை’ மவுத் பீஸ்’ஆக மட்டுமே பார்க்கிறது ஆரியம். காங்கிரசோ, பி.ஜெ.பியோ மத்தியில் இருக்கும் யாரையும் ஆள்வதும், வழிநடத்துவதும் பார்ப்பனியம் என்கிற கொடும் கூட்டணி என்பதை மறந்துவிட்டு, மேம்போகக் காங்கிரசை அழித்தால் தீர்வு கிடைக்கும் என்று திமிறாதீர்!

காங்கிரஸ் எதிர்ப்பு என்பதைவிட தி.மு.க எதிர்ப்பு என்பதில் முன்னணியில் நிற்கும் உங்களைக் கொம்பு சீவிவிட்டு நம் இனத்தையே நோக்கித் திருப்புகின்றது ஆரியம். புகழ் வெறி கொண்டு அலையும் சிலரின் பிழைப்பு வாதத்திற்குப் பலியாகாதீர்! எந்தக் காலத்திலும் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரசு செத்த பாம்பு... அதை அடித்து வெற்றி பெற்றவராக உங்களைக் காட்டிக்கொள்வதைவிட, சீறிக்கொண்டிருக்கும் பார்ப்பன நச்சரவைப் பிடியுங்கள்.

2006 தேர்தலில் சில இடங்களுக்காக அணிமாறி, தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பையும் குறைத்து, தன் இடத்தையும் இழந்து நின்று, பின்னாளில் காங்கிரசின் ஆதரவை அவசியம் பெற்றாக வேண்டிய சூழலில் தி.மு.க.வைத் தள்ளி அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சினையிலும் தமிழர்களை ஓரணியில் நிற்கவிடாமல், குறுக்குச் சால் ஓட்டி, வரலாற்றுப் பழிக்கு இலக்காகிவிட்ட ம.தி.மு.க-வைப் போன்ற அழிவு முடிவைத் தேடாதீர்கள்!

நலத்திட்டங்களுடன் சமூக நீதிக்கு உழைக்கும் அரசை ஒழித்துவிட்டு, அப்படியே தலைகீழ்த் தனமாக, தானடித்த மூப்பாகக் காட்டாட்சி நடத்தும் ஜெயாவுக்கான உங்கள் ஆதரவு என்பது தமிழன் தலையில், தமிழ் உணர்வுப் பேரைச் சொல்லி, நெருப்பள்ளிக் கொட்டுதற்குச் சமமாகும்.

சிந்திப்பீர்! வெற்று உணர்ச்சியும், பழிவாங்கும் வெறியும் தேக்கி, மீண்டும் ஒரு அவலத்தை விலைக்கு வாங்காதீர்கள்! நட்பு முரணுக்கும், பகை முரணுக்குமான வேறுபாட்டை உணராமல் முடிவெடுக்காதீர்! நாம் ஒன்றிணைந்து எதிரியை வீழ்த்துவது முறையா? எதிரியைக் கோட்டைக்குள் அனுமதித்து, நம்மவரைச் சாய்த்தல் முறையா?

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!” என்று பகைவரை விரட்டத் திரளுங்கள்! ஓரணியில் நின்று ஒன்றாய் வென்றால் எந்த எதிரியும் நம்மை வெல்ல முடியாது. இதுநாள்வரை இழைத்த தவறை இனியும் தொடராதீர்!

திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்திருக்கும் அணிக்கு வாக்குத் தாருங்கள்! உலைக்குப் பயந்து நரகலில் விழுந்த கதையாக, செத்தபாம்பு காங்கிரசை அடிக்கிறேன் என்று அதிமுக பார்ப்பனத் தலைமைக்கு பல்லவி பாடாதீர்! அல்லல் படாதீர்!

நன்றி: Prince Ennares Periyar 

Read more...

சிறுத்தைகளின் தளபதிகளில் ஒருவரான திட்டக்குடி வேட்பாளர் சிந்தனைசெல்வனின் மக்கள் செல்வாக்கு.

Friday, April 1, 2011




Read more...

சூரியக்கூட்டணிக்கு வாக்களிப்போம்! வாரீர் என வாக்காளர்களை அழைக்கும் திருமா...



சுடுக்குங்கள்..................................
http://www.thiruma.info/2011/03/blog-post_31.html

Read more...

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சிறுத்தைகாளின் இணைய தளங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது பாருங்கள் அந்த பொலிவானத் தோற்றத்தினை....


திருமா.இன்போ ஆகா ........................பாருங்கள்

http://www.thiruma.info/

Read more...

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு சிலர் ஒரு சில தொகுதிகளில் போட்டி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறு தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒரு சிலர் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு சிலர் அவ்வாறு போட்டி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. அவ்வாறு திரும்பப் பெறாமல் வேட்பாளர்களாகப் போட்டியிடும்

1) விருத்தாசலம் மருத்துவர் சுலோசனா என்ற சுடர்மதி அய்யாச்சாமி,

2) இராஜன் என்கிற குடந்தை அரசன், 3) சீர்காழி குமாரராஜா,

4) காட்டுமன்னார் கோவில் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் கட்சியினர் தேர்தல் வேலை செய்யவோ, எந்தவித அரசியல் தொடர்புகள் வைத்துக்கொள்ளவோ கூடாதென அறிவுறுத்தப்படுகின்றனர்..


மேலும் செய்திகள்............


http://www.thiruma.in/2011/04/blog-post_01.html

Read more...

தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக்காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.-தொல். திருமாவளவன்

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 




மேலும் செய்திகள்............
http://www.thiruma.in/2011/04/blog-post.html

Read more...

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும்திமுக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிற நிலையில். நெடுஞ்காடு (தனி) தொகுதி சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக திரு. அரசு வணங்காமுடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Friday, March 25, 2011


Read more...

2011 சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.




திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் முகமது யூசப் அறிமுகப்படுத்தும் கூட்டம், அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. 
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில் பாமகவுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வரும் சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கியுள்ளது என்றார்.

Read more...

24.3.11 அன்று காலை காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் துரை.ரவிக்குமார் அவர்கள் மற்றும் திட்டக்குடித்தொகுதியில் போட்டியிடுவதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் மா.செ.சிந்தனைசெல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார்.காலை வேட்புமனு தாக்கல் செய்த்தனர்.





உடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், பா.ம.க வின் வேல்முருகன் ஆகியோர்  உடன் இருந்தார்கள். 



Read more...

23.3.2011 சென்னை விஜய் பார்க் ஹோட்டலில் 2011விடுதலைச்சிறுத்தைகள் சட்டமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.தேர்தல் அறிக்கையினை விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார். உடன் வன்னி அரசு, இரவிக்குமார், வெற்றிச்செல்வன் உடனிருந்தனர்.



விடுதலைசிறுத்தைகள் தேர்தல் அறிக்கை காண...


http://www.thiruma.in/2011/03/blog-post_5706.html

Read more...

கருத்துக்களை பரிமாரிகொள்ளும் நாகரீகத் தலைவர்கள் இடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். வேளைச்சேரி.

Saturday, March 19, 2011


எழுச்சி தமிழர் மேண்மையாளர் அவர்கள் கூட்டணி கட்சி தலைவர் என்கிற முறையில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் தி. மு. க. துணை பொது செயலாளர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாரிகொள்ளும் நாகரீகத் தலைவர்கள். இடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். வேளைச்சேரி.


Read more...

நீ தலைவன் ஆனதற்கான பல தகுதிகளில் முதல் தகுதி உன் எளிமை தலைவா !-உதையகுமார், அதனால்தான் என் மகளுக்கு தலைவர் என அடையாளம் காட்டாமல் பெரியப்பா என்றே அறிமுகப்படுத்தியிருக்கிறேன் -முத்தழகு கனேசன்.


நீ தலைவன் ஆனதற்கான பல தகுதிகளில் முதல் தகுதி உன் எளிமை தலைவா !
(எழுச்சி தமிழர் மேண்மையாளர் அவர்களை கூட்டணி கட்சி தலைவர் என்கிற முறையில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் தி. மு. க. துணை பொது செயலாளர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சந்திக்க விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் காத்திருந்ததை அறிந்து சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மோட்டார் சைக்கிளில் வந்த காட்சி )

Read more...

அண்ணனின் வரலாற்று ஒளி ஒலி பதிவை சேரிதொரம் projector வைத்து ஒளிபரப்புவோம், வீடு வீடாக சென்று அமர்ந்து சந்தையிடுவது போல நமது கொள்கைகளை சந்தையிட்டு வாக்குகளை பெறுவோம்.-மனமை அரங்கநாதன்

தோழர்கள் ஆதங்கம் வரவேற்க தக்கது மாற்று அரசியல் கட்சிகளிடம் ஏன் ஒரு பொது தொகுதியில் தலித்துக்களை நிற்க வைக்க வில்லை என்று கேட்கலாம் ஆனால் சாதி ஒழிப்பை தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்ற சிறுத்தைகள் நமது தலைவரிடம் இந்த கேள்வியை கேட்க கூடாது ஏன் என்றால் ஆண்டாண்டு காலமாக நம்மை தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்த சாதி கட்டமைப்புகளை எல்லாம் உடைத்து எரிந்து நம்மோடு கைகோர்த்து அண்ணனின் தலைமையை ஏற்று களப்பணி யாற்றுகின்ற மாற்று சமூக தோழர்களை நாம் உற்சாக படுத்த நமக்கான அரசியலில் அவர்களையும் பங்கெடுக்க வைப்பதே நமக்கு பெருமை, சென்ற காலங்களில் அரசியல் தெரியாமல் இருந்தும், அதன் பின்னர் அரசியலில் புறக்கநிக்கபட்டோம், அதற்கும் அடுத்து வெறும் வாக்காளர்கலாகவும், பிரதிநிதிகளாகவும் இருந்தும் அண்ணனின் காலத்தில் தனி இயக்கம் கண்டோம் தனி தொகுதி கண்டோம் இப்பொழுது நமக்கு கிடைத்ததை பகிர்ந்தளிக்கும் நிலையில்,  யார் நம்மை தடை செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து தமிழ் தேசிய களத்தில்  களமாடி  அரசியல் களத்தில் ஒன்றிணைந்து செயல்படும் நிலைக்கு
வந்துள்ளோம் திருமாவின் காலம் இருக்கும் பொழுதே பெண்ணை கொடுத்து பெண்ணை எடுக்கும் காலம் விரைவில் வரும் சமூக மறுமலர்ச்சி ஏற்படும், நமக்கு கிடைக்க வேண்டியது அதிகாரம் அரசியல் சுதந்திரம் சமூக மாற்றம் எனவே உனக்கு எனக்கு தலித்திற்கு என்று பிடிவாதமாக இல்லாமல் யாருக்கு கொடுத்தாலும் பத்தும் வெற்றிபெற கடுமையாக உழைப்போம், தமிழர்கள் ஒன்றுபடவேண்டியத்தை பரப்புரையாக செய்வோம், கலைஞர் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதனை சொல்லுவோம், நமது தொகுதி வேட்பாளர் எப்படி பட்ட நற்குணம் மிக்கவர் என்பதை சொல்லுவோம் அண்ணனின் வரலாற்று ஒளி ஒலி பதிவை சேரிதொரம் projector வைத்து ஒளிபரப்புவோம், வீடு வீடாக சென்று அமர்ந்து சந்தையிடுவது போல நமது கொள்கைகளை சந்தையிட்டு வாக்குகளை பெறுவோம்.



மனமை அரங்கநாதன்

Read more...

எதீர்காலத்தை கருத்தில் கொண்டு களப்பணி ஆற்றுவோம் .-த.ச.பாண்டியன் திட்ட பொறியாளர் டோஹா ,கத்தார்


நமது விடுதலை சிறுதலை கட்சி சாதி ஒளிப்புக்ககவும்,தமிழ் தேசியதிர்ககவும் ,ஈழ விடுதலை காகவும் நிண்ட நாட்களாக போராட்டங்களை நாம் நடத்தி வெற்றி பெற்றுவூள்ளோம்.நமது விடுதலை சிறுத்தை கட்சிலே அணைத்து சமூகத்தினரும் கைகோர்த்து களப்பணி ஆற்றி கொண்டுவூல்லாம்.நமக்கு கிடைத்த இடம்களோ பத்து அதில் பொது தொகுதி இரண்டு மட்டுமே இப்படிபட்ட நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரைக்கும் அரவணைக்கவும் ,நம்மிடம் கைகோர்த்து கலபணியற்றும் தோழர்களை கவ்ரவிகவும் நாம் கடமை பட்டுவூளோம் ஆகவே இபொழுது நடக்க போகும் தேர்தலிலே பொது தொகுதிகளில் மாற்று சமூகத்தினரை வேட்பாளராக அறிவிப்பதே மிகவும் சால சிறந்தது அதே நேரத்தில் 2016 (அடுத்த தேர்தலிலே)தங்கவுடைய ஆதங்கமும் ,தங்களுடைய ஆசையும்  கண்டிப்பாக நிறைவேறும் இதிலே என்னைபோன்றவர்களுக்கு எந்த முரண்பாடும்  இருக்க முடியாது.
 
எதீர்காலத்தை கருத்தில் கொண்டு களப்பணி ஆற்றுவோம் .
நாம் இபொழுது போடுவது கட்டடத்தின் அஸ்திவாரம் மட்டுமே. நாம் எழுப்பபோகும் கட்டிடம் 2016 (அடுத்த தேர்தல்)
 
அண்ணன் அவர்களுக்கு நெருக்கடிகளை கொடுக்காமல் ,அவரின் முடிவுகளை ஆதரித்து கலபனியற்றி வெற்றியை மீடுஎடுப்போம்.
 
அன்புடன் ,
த.ச.பாண்டியன்
திட்ட பொறியாளர்
டோஹா ,கத்தார்
0097477131421

Read more...

தமிழகத்தின் தலித் அரசியலில் புரட்சி ஏற்படுத்திய எழுச்சித் தமிழரை தலை வணங்குவோம் -விள்ளலாளன்

தமிழகத்தின் தலித் அரசியலில் புரட்சி ஏற்படுத்திய எழுச்சித் தமிழரை தலை
வணங்குவோம் ;

கிடைத்தது 10 ஆக இருந்தாலும் 2 பொதுத்த தொகுதியை பெற்றிகிர்றோம் ;

தி மு க ; அ தி மு க , காங்கிரஸ் ஏதாவது ஒரு பொது  தொகுதியில் ஒரு
தலித்தை  நிற்கவைத்து உண்டா ?

பறையனும், பள்ளனும் ; சக்கிலியனும் தனி தொகுதியில் மட்டும் தான் நிற்க
வேண்டும் என்பதை உடைத்தெறிந்து ; பொது தொகுதியில் தலித்தை நிற்கவைக்க
இருக்கும் தலைவனுக்கு பாராட்டுக்கள்.

தங்களின் பரந்த மனம் ;  நம்மை தாழ்த்திக்கொண்டு மாற்று சமுகத்திற்கு
கொடுத்து நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதியாக ஆகிவிட கூடாது அண்ணா !




விள்ளலாளன்



Read more...

மாணவர் சக்தி என்பது மின்சக்தியைப் போன்றது என்று அடித்துச் சொல்ல வருகிறது மின்சாரம் திரைப்படம்.மாணவர்கள் பிரச்னையை மையமாக வைத்து மாணவர் சக்தியைப் பின்புலமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.


மாணவர் சக்தி என்பது மின்சக்தியைப் போன்றது என்று அடித்துச் சொல்ல வருகிறது மின்சாரம் திரைப்படம்.மாணவர்கள் பிரச்னையை மையமாக வைத்து மாணவர் சக்தியைப் பின்புலமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.தமிழரசன், பழனி எம்.இலியாஸ் இருவரும் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் 4வது படம் இது. கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செடீநுகிறார். டி.தேவன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் என்.செல்வகுமாரன். அறிமுக நாயகன் யுவராஜ், நாயகி மதுசந்தா, அறிமுக வில்லன் முத்துசாமி, சௌகந்தி, `காதல்’ சுகுமார், பாலாசிங், `கானா’ உலகநாதன், `என்னுயிர் தோழன்’ ரமா, சுஜிபாலா, `நாடோடிகள்’ நாகு, நெல்லை சிவா, கோவை செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இப்படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளார்.“நாட்டில் குற்றவாளிகள் பெருகவும், குற்றங்கள் அதிகரிக்கவும், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் சட்டமே காரணம். குற்றம் செய்தவர்கள் சிறையில்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். தவறுகள் பெருக அவர்களை வெளியே ஜாமீனில் விடுவதே காரணம். அப்படி வெளியே வந்தவர்கள் செய்யும் அநியாயங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு குற்றம் செய்துவிட்டு வெளியே வந்து மீண்டும் இன்னொரு தப்பு செய்து விட்டு உள்ளே போகிறான். மறுபடியும் வெளியே வருகிறான். தைரியமாகக் குற்றறச் செயல்களில் ஈடுபடுகிறான். மறுபடியும் உள்ளே வெளியே ஆட்டம் தொடர்கிறது. ஒருமுறை குற்றவாளியாக சிறைக்குப் போனவனை ஜாமீனில் வெளியே விடாமல் தடுத்திருக்கலாம்.எனவேதான் ஜாமீனில் வெளியே வருவதைத் தடை செய்ய வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது.இதை ஒரு பரபரப்பான காட்சியாக படத்தில் காட்டியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.
திருமாவளவன் ஒரு கட்சியின் தலைவர். அவரை நடிக்க வைத்த அனுபவம் எப்படி?
“அவர்மீது எனக்கு மதிப்பு உண்டு. என் மீது அவருக்கும் அன்புஉண்டு. அந்த உரிமையில் ஒரு பாடல் எழுதித் தருமாறு அவரிடம் முதலில் கேட்டோம். படத்தின் கதையைக் கேட்டார். பாடல் யார் சம்பந்தப் பட்டது? என்று விசாரித்தார். பின்னர் எழுதிக் கொடுத்தார். அவரது அலுவலகத்திலிருந்து புறப்பட்ட கார் அண்ணாநகர், வேளச்சேரி, அசோக் நகர் என்று நான்கு மணி நேரம் சுற்றியபடியே மீண்டும் அலுவலகம் வந்து சேர்வதற்குள் பாடலை ஓடும் காரிலேயே எழுதி விட்டார். பாடலை முதலில் எழுத வைத்து பிறகுதான் மெட்டமைத்தோம். கேட்டபோது அருமையாக இருந்தது. படத்தில் அந்தப் பாடலை ஒரு முதல்வர் பாத்திரம் மாணவர்களுடன் சேர்ந்து பாடுவதாகக் காட்சி வரும். பிறகு எங்களுக்கு அந்த முதல்வர் பாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. முதல்வர் வேடத்தில் நடிக்க மிகவும் தயங்கினார் அவர். தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பே நடிக்கச் சம்மதித்தார்” என்கிறார் தயாரிப்பாளர் தமிழரசன்.
இயக்கிய அனுபவம் எப்படி என்று இயக்குநரிடம் கேட்டபோது, “அவர் ஒரு கட்சியின் தலைவர். தொண்டர்கள் செல்வாக்கு உள்ளவர். அவரிடம் எப்படி வேலை வாங்குவது? என்று ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. அவரோ `என்னை ஒரு கட்சித் தலைவராகப் பார்க்க வேண்டாம். உங்களுக்கு திருப்தி ஏற்படும் வரையில் என்னிடம் வேலை வாங்குங்கள்’ என்றார். அதன்படியே அவர் 8 நாட்களும் ஒத்துழைப்புக் கொடுத்தார். அவர் தோன்றியிருக்கும் மூன்றாவது படம் இது. அவருக்கு மனதிருப்தி தந்த படமும் இதுதான்” என்றார்.
படத்தில் அவர் தோன்றும் முதல்வர் பாத்திரம் காமராஜர் போல எளிமையாக இருக்க வேண்டும் என்றார். எனவே இதுவரை பேன்ட்-சர்ட் போட்ட திருமாவளவனையே பார்த்திருக்கிறோம். முதன் முதலாக வேஷ்டி-சட்டை போட்டதை இப்படத்தில் பார்க்கப் போகிறார்கள். படப்பிடிப்பு முடிந்து டப்பிங்கிலும் அவர் தந்த ஒத்துழைப்பை மறக்க முடியாது.முதலில் தூய தமிழில் வசனங்களைப் பேசி பதிவானது. அது காட்சிக்கு ஒட்டாமல் போகவே எங்கள் விருப்பப்படி பேச்சுத் தமிழில் பேசிக் கொடுத்தார். அவரை திரைப்படத்துக்கு கவிஞராக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல. அழுத்தமான பாத்திரத்தில் நடிக்க வைத்ததும் எங்கள் படத்தில்தான் என்பதில் பெருமைப்படுகிறோம்.
எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. சினிமாவில் எப்படி நடிக்க வைக்கப் போறீங்க? என்றவர், என்னை நல்லா நடிக்க வெச்சிருக்கீங்க என்கிற அளவுக்குப் பயன்படுத்தியுள்ளோம் என்றவரிடம்,
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிற படம் என்பதால் வணிக ரீதியிலான பலத்துக்காகவே திருமாவளவனை நடிக்க வைத்தீர்களா? என்றால், “அவரது கேரக்டர் படத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்தது. சாதாரணமாகத் தெரிந்த படம் அவர் நடித்த பிறகு பெரிய படமாகி விட்டது. அவரை வைத்து வியாபாரப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. அன்புக்காக மட்டுமே அவரை நடிக்க வைத்தோம்.திட்டமிட்டு அவரை நடிக்கவைக்கவில்லை. திடீரென்று தோன்றிய எண்ணம்தான் இந்த முடிவு”என்கிறார் தயாரிப்பாளர் தமிழரசன்.
இது அவர் தயாரிக்கும் 4-வது படம்.`மின்சாரம்’ முழுக்க முழுக்க சென்னையிலேயே உருவாகியுள்ள படம். சென்னையில் போக்குவரத்து நெரிசலுள்ள பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம், பாடல் காட்சிகளுக்கும் கூட்டம் என நிறைய பேர் நடித்துள்ளனர். இது போதாதுஎன்று திருமாவளவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது பார்வையாளர் கூட்டம் வேறு அலைமோதியிருக்கிறது.
மின்சாரம் படத்தில் மொத்தம் 4 பாடல்கள். `விழித்தெழு மனிதா.. விழித்தெழு..’ என்ற பாடலை திருமாவளவன் எழுதியிருக்கிறார். படத்தில் அவர் பாட, மாணவர்கள் திரும்பப் பாடுவதாகக் காட்சி வரும். `காசி மேட்டுக் குப்பத்தையே கலக்குறாளே..’ இது இன்னொரு கானா பாடல். இதை கானா உலகநாதன் பாடியிருக்கிறார். இது அவருக்கு இன்னொரு வாடிநக்கை தருமளவுக்கு ஹிட் ஆகும். இதை வானவன் எழுதியிருக்கிறார். இப்பாடல் காட்சிக்காக 12 இலட்ச ரூபாய் செலவில் மார்கெட் செட் போடப்பட்டு படமாகியுள்ளது. கானா உலகநாதனுடன் `நாடோடிகள்’, `மைனா, படங்களில் ஆடிய நடிகை நாகு இணைந்து ஆடியுள்ளார்.`கோலம்மா கோலம்மா..’ இன்னொரு பாடலை எழுதியுள்ளவர் முத்து விஜயன். இப்பாடல் காட்சியில் நாயகன் யுவராஜுடன் சுஜிபாலா ஆடியுள்ளார். `ஆனந்த தீபங்கள் ஆயிரம் ஏற்றுங்கள் வீட்டினிலே..’ என்கிற பாடலை சண்முக சீலன் எழுதியிருக்கிறார்.
அரசியல், மாணவர் சக்தி, ரவுடிகள் அராஜகம், ஈவ் டீசிங் கொடுமை என எல்லாவற்றையும் கலந்து நாட்டு நடப்பை அலசும் படமாக மின்சாரம் உருவாகி இருக்கிறது. பிப்ரவரி முதல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது.    
 சு, நிவலன்

Read more...

எதிர்வரும் 13.04.2011 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிடும் பத்து (10)தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு :

1. காட்டுமன்னார்கோயில்( தனி ): துரை.ரவிக்குமார்


2. திட்டக்குடி ( தனி ): ம.செ.சிந்தனைசெல்வன்


3. உளுந்து£ர்பேட்டை ( பொது ): முகமது யூசுப்


4. சீர்காழி ( தனி ): உஞ்சை அரசன்


5. கள்ளக்குறிச்சி ( தனி ): ஏ.சி.பாவரசு


6. செய்யூர் ( தனி) :  வழக்கறிஞர் பார்வேந்தன்


7. சோழிஙக்நல்லு£ர் ( பொது ) : எஸ்.எஸ்.பாலாஜி


8. அரக்கோணம் ( தனி ) :  வழக்கறிஞர்செல்லப்பாண்டியன்


9. அரூர் ( தனி ) : பொ.மு.நந்தன்


10. ஊத்தஙக்ரை ( தனி ) : முனியம்மாள் கனியமுதன்






இவண்












நன்றி
http://www.thiruma.in/2011/03/blog-post_19.html

Read more...

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் சட்ட மன்ற தேர்தலில் ஒரு தொகுதி எனக்கு கொடுக்க வேண்டும் என பல்வேறு நெருக்கடிகளை தலைமைக்கு கொடுத்தார் எனினும் தலைமைக்கு தெரியாமல் அவரே ஒரு முடிவை எடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை விடுத்தது இருக்கிறார்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் சட்ட மன்ற தேர்தலில் ஒரு தொகுதி எனக்கு கொடுக்க வேண்டும் என பல்வேறு நெருக்கடிகளை தலைமைக்கு கொடுத்தார் எனினும் எழுச்சித்தமிழர் நமக்கு கிடைத்து இருப்பது இரண்டு பொது தொகுதிதான் கொஞ்சம் பொறுமையோடு இருங்கள் கட்சி அங்கீகாரம் கிடைத்தவுடன் நீங்கள் எதிர்பார்பதை விட அதிகமான வாய்ப்புகளை தருகிறேன் என்று சொல்லியும் தலைமைக்கு தெரியாமல் அவரே ஒரு முடிவை எடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை விடுத்தது இருக்கிறார்




நன்றி...
http://thiruma.net/newsreader.php?id=2145

Read more...

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடந்த உடன்பாட்டின் படி அத்தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

Tuesday, March 15, 2011



1.சோழிங்கநல்லூர்
2.செய்யூர்
3.அரக்கோணம்
4.உளுந்தூர்பேட்டை
5.கள்ளக்குறிச்சி
6.திட்டக்குடி
7.காட்டுமன்னார்கோயில்
8.அரூர்
9.சீர்காழி
10.ஊத்தங்கரை



நன்றி


http://www.thiruma.in/2011/03/blog-post_15.html

Read more...

எல்லோரும் குல தெய்வத்திற்கு விரதம் எடுப்பதுபோல் ஒழுக்கமாக இருந்து தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் -எழுச்சித்தமிழர்

Monday, March 14, 2011

வருகிற சட்டமன்ற தேர்தலுக்குஇன்னும் குறைந்த நாள்கள் தான் இருக்கிறது ஆக எல்லோரும் குல தெய்வத்திற்கு விரதம் எடுப்பதுபோல் ஒழுக்கமாக இருந்து தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என எழுச்சித்தமிழர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Read more...

தலைவர் திருமாவின் உழைப்பும் ,சமூக பங்களிப்பும் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ ஊடகவியலாரான உங்களுக்கும் , மனசாட்சிக்கும் தெரியும் என கருதுகிறேன் -கல்லை நகர் தமிழினியன் @ தனசேகர்.

Saturday, March 12, 2011

தலைவர் திருமா ,சில ,பல நேரங்களில் ,விருபினாலும் ,விரும்பாவிட்டாலும் ,கண்ணியம் ,அனுசரித்தல் ,சகித்து கொள்ளுதல் போன்ற உத்தியை கையாள கடமைப்பட்டவராக இருக்கிறார் .ஒரு இயக்கம் ,அமைப்பாய் இருக்கிற போது இருந்த சுதந்திரம் ,தற்போது அவருக்கு இல்லை என்பதே உண்மை ,தெரிந்தே அவர் சகித்து கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை .இதில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும் தலைவர் திருமா இடத்தில் நீங்களோ ,நானோ இருந்தால் கூட இது நிகழ்ந்துதான் இருக்கும் .வேறு எந்த தலித் அமைப்பும் எட்டாத பரந்த பரப்பை கட்டியமைதவர் தலைவர் திருமா ,வேறு எந்த தலித் கட்சியும் தமிழ்நாட்டில் இத்தனை வலுவானதாக இருக்கவில்லை .உங்களுக்கே தெரியும் வெறும் திறமை உள்ளவர் மட்டும் ,அறிவாளி மட்டும் ,பலசாலி மட்டும் ,பணவாதி மட்டும் ஜெயித்து விடுவதில்லை ,சமயோசித புத்தி ,சகிப்பு தன்மை ,விட்டுகொடுத்தல் ,கண்ணியம் காத்தல் இப்படி எத்தனனயோ ...., இருக்கின்றன ! காங்கிரஸ் துதி பாடினார் என்கிறீர்கள் , கூட்டணி தர்மத்தில் ,அவருக்கும் தர்ம சங்கடம் .அதையும் மீறி ,இலங்கை தமிழருக்காய் எழ வேண்டிய நேரத்தில் எழவில்லையா ? கலைஞரும் ,சோனியாவும் ,தலைவர் திருமா மேல் வருத்தம்தான் பட்டார்கள் .ஒரு சிறு பிள்ளை போல் போசுகென்று கோபித்து கொண்டு வந்துவிட முடியுமா ? வெறும் கோபத்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும் .அவர்களை நாசுக்காக கையாண்டுதான் நம் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள முடியும் .தோழர் நீங்கள் நன்கு அறிந்தது தான் ,தலித்துகளையும் ,தலித்துகளின் கோரிக்கைகளையும் எந்த அரசு மதிக்கிறது .நாம் இன்னும் பலம் பெற வேண்டும் ,அதற்கு சில நேரங்களில் மௌனம் காக்க வேண்டிதான் உள்ளது .அதிகாரம் நம்கைக்கு வருகிற போது தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் .அதையும் விடுங்கள் புலிகளுக்காக இந்த எலிகள் ஒரு துரும்பை கூட எடுத்து எடுத்து போடா வில்லை என்று கருதுகிறீர்களா ? தலைவர் திருமாவின் உழைப்பும் ,சமூக பங்களிப்பும் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ ஊடகவியலாரான உங்களுக்கும் , மனசாட்சிக்கும் தெரியும் என கருதுகிறேன் 


தனசேகர் @ தமிழினியன்
மாநில நிர்வாகி-வி.சி.க
கள்ளக்குறிச்சி

Read more...

அரசியல் அதிகாரம் என்று நம் கையில் வருகிறதோ,அன்று தான் நமக்கான விடுதலை கிடைக்கப்பெற்றதாக அர்த்தமாகும்.

அரசியல் அதிகாரம் என்று நம் கையில் வருகிறதோ,அன்று தான் நமக்கான விடுதலை கிடைக்கப்பெற்றதாக அர்த்தமாகும். பதறி காரியத்தை சிதற விடுவதில் இல்லை..இதுவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் எனில் நமது அமைப்பாய் நாம் எடுக்கும் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். இன்று நாம் மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் கட்சியாக வளர்ந்து நிற்கிறோம்..அதை அடைகாக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். வெண்மணி கொடுமையில் மாண்டு போனவர்கள் அனைவருமே தலித்துகள் என்பது வரலாறு.இருப்பினும் அதை சாதிவெறி மேலாதிக்கம் என்ற உண்மையை மறைத்து , வர்க்கப் போராட்டம் என்ற அளவிலேயே கம்யூனிஸ்ட்களும் , பிற கட்சி தலைவர்களும் வரலாற்றை மறைத்தார்கள். இனியும் பிற கட்சிகளையோ,தலைவர்களையோ நாம் நம்பவேண்டிய அவசியமில்லை. அரசியலில் வெற்றிகளை தலைவர் திருமா வழியில் வென்றெடுப்பதன் மூலம் நாம் எதையும் சாதிக்கலாம். அது ஒன்றே நிரந்தரத் தீர்வும் கூட.


-உதய குமார்
குவைத் நாட்டிலிருந்து.

Read more...

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திரு.பாரி செழியன் அவர்கள் நம் தாத்தா அய்யோத்திதாச பண்டிதர் அவர் மைத்துனர் தத்தா ரெட்டைமல சீனிவாசன் இவர்களை பற்றிய ஓர் அழிக்கமுடியாத வரலாற்று செய்திகளை அவர்கள் பெயரிலே இணையதளம் உருவாக்கி வழி நடத்துகின்றார் பாருங்கள் நம் தமிழ் தாத்தாகளின் சாதனையை பிறகு நாம் என்ன இதுவரை செய்துள்ளோம் என எண்ணலாம்...

Friday, March 11, 2011


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திரு.பாரி செழியன் அவர்கள் நம் தாத்தா அய்யோத்திதாச பண்டிதர் அவர் மைத்துனர் தத்தா ரெட்டைமல சீனிவாசன் இவர்களை பற்றிய ஓர் அழிக்கமுடியாத வரலாற்று செய்திகளை அவர்கள் பெயரிலே இணையதளம் உருவாக்கி வழி நடத்துகின்றார் பாருங்கள் நம் தமிழ் தாத்தாகளின் சாதனையை பிறகு நாம் என்ன இதுவரை செய்துள்ளோம் என எண்ணலாம்...

http://www.ayyothidhasapandithar.blogspot.com/


Read more...

ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.


இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
10 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதுமிருந்து 1025 மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. விருப்ப மனுக்களின் விண்ணப்பக் கட்டணம் மூலம் ரூ. 52 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. 

தொல்.திருமாவளவன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அவரது சார்பாக 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 235 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொடுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நக்கீரன்

Read more...

Read more...

தமிழர் இறையாண்மை மாநாட்டு வெற்றி மலர் தென்சென்னை மாவட்ட ஊடக மையம் சார்பாக வெளியிட உள்ளார்கள்.

Thursday, March 10, 2011



தமிழர் இறையாண்மை மாநாட்டு வெற்றி மலர் 

தென்சென்னை மாவட்ட ஊடக மையம் சார்பாக
வெளியிட உள்ளோம்.

தமிழர் இறையாண்மை மாத இதழ்
அனுப்பி வைக்க உங்கள் முகவரி 
தரவும்.
நன்றி
எங்கள் இணையதளம்

aathi bagavan 

<vckchennai@gmail.com>

Read more...

அண்ணன் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் அணிவகுத்து நமக்கான அரசியல் அங்கீகாரத்தை வென்று எடுப்போம் -வளவன் @ கோ. இராமச்சந்திரன் . திருவாரூர்

   வணக்கம் உறவுகளே வந்தாரை வாழவைக்கும் தமிழ்மண்ணின் பூர்வீக குடியான நாம். நம்மால் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருகின்றார்கள் நாம் இன்னும் சாதியால் தாழ்ந்து கிடக்கின்றோம். ஏன் ? நம்மில் ஒற்றுமை இல்லாமை .புரிதல் இல்லாமை ஒருகிணைப்பு இல்லாமை .அடங்கி கிடந்தது எல்லாம் போதும்.அடங்கமறுத்து அத்துமீறி திமிரி எழுந்து அண்ணன் டாக்டர் தொல்.திருமாவளவன் .அவர்களின் பின்னால்  அணிவகுத்து நமக்கான அரசியல் அங்கீகாரத்தை வென்றுஎடுப்போம் அதுதான் 2011 சிறுத்தைகள்  ஆண்டு ஒன்றுபடுவோம் சிறுத்தைகளே வென்றுகாட்டுவோம் .

இவண் .

வளவன் @ கோ. இராமச்சந்திரன் .
(திருவாரூர்)

சவுதி அரேபியா

Read more...

திருமா அவர்கள் தமிழினம் காக்க வந்துள்ள அதிசய பிறப்பு -வேங்கை சு.செ.இப்ராஹீம்.

Wednesday, March 9, 2011

திருமா அவர்கள் தமிழினம் காக்க




வந்துள்ள அதிசய பிறப்பு -         






வேங்கை 






சு.செ.இப்ராஹீம்.

Read more...

வெற்றிப்பாதையில்...விடுதலை சிறுத்தைகள்...வேங்கை சு.செ.இப்ராஹீம்.


தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள
நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணிகளை
ஏறக்குறைய உறுதிசெய்துவிட்டன. ஆளும் திமுக தரப்பிலும் அதிமுக
தரப்பிலும் பல கூட்டனிகட்சிகளுடன் தொகுதி பங்கீடே முடிந்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு
பத்து சட்டமன்ற தொகுதிகளை பெற்று தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கிறது.வெறும் பத்து தொகுதிகளை கொடுத்து திமுக திருமாவை ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியின் மீதும் திருமா அவர்கள் மீதும் அபிமானம் கொண்ட அணைத்து தரப்பினரும் விவாதித்து வருகிறார்கள்...

மேலோட்டமாக பார்பவர்களுக்கு திருமாவை திமுக ஏமாற்றிவிட்டதாகவே தோணும்...ஆனால் சில விசயங்களை மீளாய்வு செய்து சில கடந்த கால சம்பவங்களை உள்வாங்கி நிதர்சனமாக பார்த்தல் பத்து தொகுதிகளை ஒப்புக்கொண்ட தோழர்.திருமாவின் சாதுரியம் விளங்கும்.

ஆரம்ப காலத்தில் தலித் பாந்தர் இயக்கமாக அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகளாக அரசியலையே புறக்கணித்து வந்த திருமா இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறார் என்பதே உண்மை... விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசியல் களத்திற்கு வந்த காலம் முதல் படிபடியாக வளர்ந்தே வருகிறர்கள் இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர்களின் கைகள் ஓங்கியே நிற்கிறது.

தீர்க்கமான களபனியும் மூர்க்கமான கொள்கைபிடிப்பும் எதார்த்தமான தூரநோக்கு பார்வையும் கொண்ட தோழர்.தொல்.திருமாவளவன் தன்னை உருவாக்கிய தலித் சமூக மக்களை சரியான இலக்கை நோக்கியே நகர்த்தி வருகிறார். அடக்கி ஆளப்பட்ட சமூகத்தை ஆளக்கூடிய சமூகமாக மற்றும் முயற்சிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

2001 சட்டமன்ற தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட சிறுத்தைகள் 2006 சட்டமன்ற தேர்தலில் ஒன்பது இடங்களில் போட்டியிட்டது. இப்போது 2011 சட்டமன்ற தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த நிலையை வளர்ச்சி என சொல்லாமல் வேறு என்னவென்பது.

ஆதிக்க சாதிகளின் ஆளுமையில் இருந்த தமிழக அரசியல் களத்தை சிறுத்தைகள் மாற்றி வருகிறார்கள் என்பதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை சொந்த சின்னத்தில் போட்டியிட்டு சிதம்பரத்தில் வெற்றியையும் விழுப்புரத்தில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பையும் இழந்தது மகத்தான அத்தாட்சி...

சாதி என்கிற குறுகிய வட்டத்துக்குள் கட்சியை அடைத்துவிடாமல் வெகுஜன மக்களின் அங்கீகாரத்தையும் கருத்தில்கொண்டு இன்று சிறுத்தைகள் இஸ்லாமிய மக்களையும் சில பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும் தங்களின் பயணத்தில் இணைத்துகொண்டு வெற்றிகரமாக பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் ஜீவாதார உரிமையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி பலவிதமான செயல்பாடுகளை நிகழ்த்திவரும் சிறுத்தைகளை முஸ்லிம்கள் கவனிக்க தவறவில்லை என்பதற்கு சிறுத்தைகளின் உட் பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் கிளைகள் வெகுவாக வளர்ந்துவருவதே சாட்சி...

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பை கண்டித்து சென்னையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் முதல் நபராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய தோழர்.திருமாவை முஸ்லிம்கள் இன்று நட்போடும் நம்பிக்கையோடும் பார்க்க துவங்கியுள்ளார்கள் என்பது மிகையல்ல... அதேபோல சென்னை மக்கா பள்ளியில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகஏற்றுக்கொண்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எந்த அரசியல் மாச்சரியங்களுக்கும் அஞ்சாமல் துணிவுடன் தனது கருத்துகளை எடுத்துரைத்த தோழர்.திருமா அவர்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் மரியாதையுடனே நட்பு பாராட்டி வருகிறார்கள்.

2011 ஆம் ஆண்டை விடுதலை சிறுத்தைகள் ஆண்டென பிரகடனம் படுத்தியுள்ள திருமாஎதிர்வரும் 2016 ஆம் ஆண்டை தலித்கள் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்த அரசியல் எழுசியாண்டாக பிரகடன படுத்தியுள்ளார். ஆதிக்க சக்திகளால் அடிமைபடுதப்பட்ட தலித் மக்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்"ஆதிக்க வர்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி முஸ்லிகள் தங்களை தாங்களே "தாழ்த்திகொண்டவர்கள்"

தாழ்த்தப்பட்டவர்களும் தாழ்த்திகொண்டவர்களும் கைகோர்த்து களமாடினால் நாளை தமிழகத்தின் வரலாறை நமது வருங்காலமே தீர்மானிக்கும்.

இந்த சட்டமன்ற தேர்தல் களம் சிறுத்தைகளின் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெரும் யுத்தகளம்... அதே வேளையில் தோழர்.திருமா முன்னெடுத்து செல்லும் முஸ்லிம்கள் தலித்துக்கள் ஒருங்கிணைந்த அரசியலுக்கான அடித்தளம்...
வியூகம் அமைப்பதில் விவேகமான தோழர்.திருமா அவர்களின் சிறுத்தைகள் கவனமுடன் களமாடினால் நிச்சயமாக பத்துக்கு பத்தும் வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை...





Read more...

நமக்கான அங்கீகாரமும் அதிகாரமும் நம் கையில் இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகளே வீருகொண்டெழுவோம்.


நமக்கான அங்கீகாரமும் அதிகாரமும் நம் கையில் இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகளே வீருகொண்டெழுவோம்.

Read more...

நமக்கான அரசியல் அதிகாரம் தான் என்கிற மன நிறைவுடன் பணியாற்றுவோம். தோழமையின் வேண்டுகோள் (மனமை அரங்கநாதன்)...


தோழர்களே...! 

மனு தாக்கல் பண்ண அனைவருக்கும் அல்லது தேர்தலில் பங்கெடுக்கவேண்டும் என்கிற அனைவருக்கும் தொகுதி ஒதுக்கீடு என்பது சாத்திய படாத ஒன்று நமக்கு கொடுக்க பட்டுள்ள தொகுதியின் அளவு வெறும் பத்து தான் எனவே தலைவர் தகுதியான அல்லது கட்சிக்கும் மக்களுக்கும் பங்காற்றும் நபர்களை நிறுத்துவார் என்பதை நம்புவோம் எனவே தேர்தலில் தொகுதி கிடைத்தாலும் இல்லை என்றாலும் நாமே நிற்பதாக எண்ணி வாக்கு சேகரிக்கும் வேளைகளில் தீவிரமாக செயல்படுவோம் நாம் பெறுவது அரசியல் அதிகாரம் மட்டும் அல்ல நமது தோழர்கள் பெறுவதும் நமக்கான அரசியல் அதிகாரம் தான் என்கிற மன நிறைவுடன் பணியாற்றுவோம் நன்றி

மனமை அரங்கநாதன்
manickam vellaian <manickam.vck@gmail.com> 

Read more...

மக்களின் பேராதரவுடன் சிறுத்தைகள் முத்திரையை பதிக்கும்.........2011 ல்





திருமா. நெட் வழங்கிய செய்தியில்.....

Read more...

மகளிர் தினத்திற்கு வளவனாரின் வாழ்த்துக்கள்...


திருமா.இன் லிருந்து..............................

Read more...

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையத்தின் மாநில, மாவட்ட செயற்க்குழு கூட்டம் சென்னை வேளச்சேரி தமிழ்மண் அலுவலகத்தில் நடைப்பெற்றது: தீவிரமாக களப்பணி செய்து காட்சி அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகம் செய்யலாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதை நீங்கள் எல்லோரும் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று தலைவர் தன் நிறைவுரையில் பேசினார்.

Monday, March 7, 2011


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையத்தின் 
மாநில, மாவட்ட செயற்க்குழு கூட்டம்.
சென்னை வேளச்சேரி தமிழ்மண் அலுவலகத்தில் நடைப்பெற்றது. 
இதனை ஊடக மையத்தின் மாநில செயலாளர் அறிவமுதன் தலைமை தாங்கினார். 
இந்த செயற்குழு கூட்டம் காலை முதல் மாலை வரை நடைப்பெற்றது. 
இந்த அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் கட்சியின் ஊடகத்தை 
எப்படியெல்லாம் வழிமுறை செய்து அதனை வலிமைப் படுத்த வேண்டும் 
என்று ஒவ்வொரு ஊடக பொறுப்பாளர்கள் தங்களின் கருத்துகளை 
பதிவு செய்தார்கள். 
தங்களால் ஆன பணிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 
களப்பணி ஆற்றுவோம் என உறுதியளித்தார்கள். 
மாநில செயலாளர் அறிவமுதன் பேசும்பொழுது,
ஒரு கட்சியை வலிமைப் படுத்துவது ஊடகம் தான் 
இதில் ஊடகத்தைச் சார்ந்த அனைவரும் முழு அர்ப்பணிப்போடு 
செயல்பட வேண்டும், ஊடகம் தான் கட்சியின் முதுகு எலும்பாக செயல் படவேண்டும். 
வருகின்ற தேர்தல் வெற்றிக்கு நமது ஊடகம் தான் முக்கியமான காரணம் 
என்பதை நிலை நாட்டவேண்டும். 
அதற்கான செயல் திட்டத்தை வரையறுத்து செயல்பட வேண்டும் என்று பேசினார். 
சிறப்பு அழைப்பாளர்கள் கௌதம சன்னா, பாவலன் சேகுவேரா ஆகியோர் 
கலந்து கொண்டு ஒருசில கருத்துக்களை கூறினார்கள்..
பாவலன் பேசும் பொழுது: தலைவர் அவர்கள் ஒரு தலித் 
தலைவராக இருக்கின்ற காரணத்தினால் நாம் எவ்வளவு 
பெரிய கருத்துக்களை முன் வைத்தாலும் மாற்று ஊடகத்தில் 
அத்தகைய கருத்துக்களை பதிவு செய்வதில்லை, 
ஆக நமது ஊடகத்தை வலிமைப் படுத்த வேண்டும் என பேசினார். 
கௌதம சன்னா பேசும் போது: இன்றைய காலம் கணினி உலகம்,என்று 
சொல்லக் கூடிய அளவிற்கு கணினி வளர்ந்து இருக்கிறது.
அச்சு ஊடகத்தை வலிமைப் படுத்துவதை விட இணைய தளத்தை 
வலிமைப்படுத்த வேண்டும், வருகின்ற தேர்தலில் ஊடக மையப் 
பொறுப்பாளர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்து இருக்கின்ற
 10 தொகுதிகளிலும் கிராமம் கிராமமாக சென்று தலைவரின் 
பேச்சுகளை ,கட்சியின் பாடல்களை திரைகட்டி போட்டுக் காட்டி பிரச்சாரம் 
செய்யவேண்டும் என பேசினார். 
இறுதியில் கலந்துகொண்டு பேசிய எழுச்சித்தமிழர் அவர்கள் நமது கட்சியில் 
எத்தனையோ துணைநிலை அமைப்புகள் இருந்தாலும் 
அவர்களை விட நீங்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும்,
ஈழத்திலே மேதகு.பிரபாகரன அவர்களும் அவர்களின் போராளிகளும் 
எதிரிகளோடு போரிட்டு கொண்டு இருப்பார்கள். 
அவர்களின் ஊடகம் தன் உயிரை கூட பொறுபடுத்தாமல் 
தீவிரமாக களப்பணி செய்து காட்சி அனைத்தையும் பதிவு செய்வார்கள்.
அப்படிப்பட்ட செயல்வீரர்களாக வளரவேண்டும். 
விடுதலை புலிகளின் ஊடகம் போன்று 
விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகம் செய்யலாற்ற வேண்டும் 
என்பது என்னுடைய விருப்பம் அதை நீங்கள் எல்லோரும் 
முன்னெடுத்து செல்லவேண்டும் என்று தலைவர் தன் நிறைவுரையில் பேசினார்.

Read more...

மதுராந்தகம் அல்லது செய்யூரில் போட்டியிட மாநில செய்திதொடர்பாளர் திரு.வன்னிஅரசு சார்பில் விருப்பமனு



2011-சட்டப்பேரவைத் தேர்தல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (தேர்தல் பணிக்குழு)
வணக்கம்,


மாவட்டத்தில் தேர்தல் பணிக்குழுக்களை (தொகுதிக்குழு, பகுதிக்குழு, வாக்குச்சாவடிக்குழு) அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கீழ்க்கண்டவாறு தலைமைக்குழு அறிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட நாளில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பொறுப்பாளர்கள் பட்டியலினடிப்படையில் அனுபவம், பொறுப்பு, வயது ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தொகுதிக்குழுவினர் ஐந்து நபர்களை (மாவட்டச் செயலாளர் ஏதாவதொரு தொகுதியில் குழு உறுப்பினராக, மாவட்ட முழுமைக்கும் நிர்வாகப்பணியை மேற்கொள்பவராக) நியமிக்க வேண்டும்.

வ.எண்
மாவட்டம்
நாள்
தலைமைக்குழு
1
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர்
08.03.2011
பெ.ஆற்றலரசு,
அய்யங்காளை
2
நெல்லை, நெல்லை மாநகர்,
கன்னியாகுமரி
09.03.2011
3
சிவகங்கை
07.03.2011
மு.கலைவேந்தன்
வெ.கனியமுதன், பாண்டியராசன்,
4
இராமநாதபுரம்
08.03.2011
5
திண்டுக்கல்
09.03.2011
6
பெரம்பலூர்
07.03.2011
குடந்தை அரசன், தங்கத்துரை
7
அரியலூர்
07.03.2011
8
திருவாரூர்
08.03.2011
9
திருச்சி,
திருச்சி மாநகர்
07.03.2011
ஏ.சி.பாவரசு,
இளஞ்சேகுவேரா
10
கரூர்
08.03.2011
11
தென்சென்னை
07.03.2011
ஆர்வலன், எஸ்.எஸ்.பாலாஜி
12
ஈரோடு, ஈரோடு மாநகர்
07.03.2011
பேரறிவாளவன்,
பார்வேந்தன்
13
நாமக்கல்
14
திருப்பூர், திருப்பூர் மாநகர்
08.03.2011
15
நீலமலை
09.03.2011






****



2011-சட்டப்பேரவைத் தேர்தல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (தேர்தல் பணிக்குழு)

வணக்கம்,

மாவட்டத்தில் தேர்தல் பணிக்குழுக்களை (தொகுதிக்குழு, பகுதிக்குழு, வாக்குச்சாவடிக்குழு) அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கீழ்க்கண்டவாறு தலைமைக்குழு அறிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட நாளில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பொறுப்பாளர்கள் பட்டியலினடிப்படையில் அனுபவம், பொறுப்பு, வயது ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தொகுதிக்குழுவினர் ஐந்து நபர்களை (மாவட்டச் செயலாளர் ஏதாவதொரு தொகுதியில் குழு உறுப்பினராக, மாவட்ட முழுமைக்கும் நிர்வாகப்பணியை மேற்கொள்பவராக) நியமிக்க வேண்டும்.


வ.எண்
மாவட்டம்
நாள்
தலைமைக்குழு
1
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர்
08.03.2011
பெ.ஆற்றலரசு,
அய்யங்காளை
2
நெல்லை, நெல்லை மாநகர்,
கன்னியாகுமரி
09.03.2011
3
சிவகங்கை
07.03.2011
மு.கலைவேந்தன்
வெ.கனியமுதன், பாண்டியராசன்,
4
இராமநாதபுரம்
08.03.2011
5
திண்டுக்கல்
09.03.2011
6
பெரம்பலூர்
07.03.2011
குடந்தை அரசன், தங்கத்துரை
7
அரியலூர்
07.03.2011
8
திருவாரூர்
08.03.2011
9
திருச்சி,
திருச்சி மாநகர்
07.03.2011
ஏ.சி.பாவரசு,
இளஞ்சேகுவேரா
10
கரூர்
08.03.2011
11
தென்சென்னை
07.03.2011
ஆர்வலன், எஸ்.எஸ்.பாலாஜி
12
ஈரோடு, ஈரோடு மாநகர்
07.03.2011
பேரறிவாளவன்,
பார்வேந்தன்
13
நாமக்கல்
14
திருப்பூர், திருப்பூர் மாநகர்
08.03.2011
15
நீலமலை
09.03.2011





****


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
(தேர்தல் பணிக்குழு)
2011-சட்டப்பேரவைத் தேர்தல்


வ. எண்
மாவட்டம்
தொகுதி
பணிக்குழுவினர்
1
கடலூர்
காட்டுமன்னார்கோயில்
சி.வள்ளுவன் - 94425 32291
மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்-94440 20708
கடலூர்.பாவாணன் - 94423 42700
அ.ர.அப்துர்;ரகுமான் - 99622 88786
வ.க.செல்லப்பன் - 98943 10827
ஜவஹர் - 94442 68238
திட்டக்குடி
இரா.செல்வம் - 99405 08800
சு.திருமாறன் - 98403 49016
கி.அன்பழகன் - 94435 38705
மங்களுர்.குணத்தொகையன் - 94862 20155
தயா.தமிழன்பன் - 94431 07470
புவனகிரி

த.பன்னீர்செல்வம் - 94433 96939
பா.தாமரைச்செல்வன் - 94436 69306
இரா.காவியச்செல்வன் - 94431 11875
கி.சு.அகத்தியன் - 93677 28897
அர.தமிழ்ஒளி – 94452 59695
கிளாங்காடு வெங்கடேசன் - 97510 93218
2
விழுப்புரம்
(1)வானூர்
கோட்டைக்காடு துரை – 98409 91177
ஏ.வெற்றிச்செல்வன் - 90470 16663
தமிழ்மாறன் -
வீராணம் ஆற்றலரசு – 97863 49203
அய்யா.கரிகாலன் - 98426 30884
வீர.பொன்னிவளவன் - 99417 95971
இரணியன் - 98426 29954
(2) திண்டிவனம்
வெ.அ.ரமேசுநாதன் - 95000 18068
பொதினிவளவன் - 93620 96413
ஏ.சேரன் -
கெய்க்வாட்பாபு – 94434 02546
ஆசிரியர்.கந்தசாமி -
(3) கள்ளக்குறிச்சி
தளபதி துரை – 94441 56922
எம்.எஸ்.இராசேந்திரன் - 97877 26277
மு.தமிழ்மாறன் - 94424 44024
அறிவுக்கரசு – 94436 17239
பாலு (எ) பாவலன் -
பாசறை தமிழ்வாணன் - 98434 10243
கலையழகன் - 99430 20975
3
காஞ்சிபுரம்
(1) செய்யூர்

இளஞ்சேகுவேரா – 99410 03493
சூ.க.விடுதலைச்செழியன் - 94441 22670
முனைவர்.மகாதேவன் - 94444 10834
பு.பெ.கலைவடிவன் - 98946 40471
பள்ளிக்கரனை வீரமணி – 96770 20604
பம்மல் சுப்பிரமணியன் - 98849 48650
பனையூர் பாபு – 94440 67768
4
தருமபுரி
(1) அரூர்
தகடூர் தமிழ்ச்செல்வன் - 94442 23270
மா.செ.எழிலன் - 94436 87715
கவிதா சம்பத் - 89035 69734
நந்தன் - 94430 57388
கோட்டை மு.கலைவாணன் - 98949 18634
சம்பத் - 98949 18634
ஜெயந்தி – 97902 30040
5
கிருட்டிணகிரி
(1) ஊத்தங்கரை
பூவை.வல்லரசு – 94441 43282
கி.கோவேந்தன் - 94432 65600
கனியமுதன் - 94429 58182
பொடா.பழனி – 91762 64717
அசோகன் -
சரவணன்
6
நாகை
(1) சீர்காழி

ம.ஈழவளவன் - 94898 58454
ஆக்கூர் செல்வராசு – 94865 80581
பா.ரவிச்சந்திரன் - 94431 51135
என்.டி.இடிமுரசு – 95858 08502
கதிரவன் - 97889 78050
வேலு குணவேந்தன் -
7
தஞ்சை
(1) திருவிடைமருதூர்
அரசாங்கம் - 94427 79098
குடந்தை அரசன் - 98941 82482
விவேகானந்தன் - 94431 88149
அதிரை இப்ராகிம் - 99521 27100
தமிழ் நீதி – 94438 46565
உயிரன்பன் - 93606 76021
குடந்தை தமிழினி – 99947 08191
தஞ்சை செல்வி -
8
திருவள்ளுர்
(1) பொன்னேரி
நீலவானத்துநிலவன் - 94441 59853
அ.பாலசிங்கம் - 96773 78828
மீஞ்சூர் செந்தில்குமார் - 99628 56256
பொறியாளர்.வெற்றிச்செல்வன் - 93801 98925
தண்டலம் தமிழ்ச்செல்வன் - 96557 48921
இப்ராகிம் - 98407 72262
அன்புச்செல்வன் -
ஜெயபிரகாஷ் - 99407 30806
9
வேலூர்
(1) கே.வி.குப்பம்

வேலூர் பேரறிவாளன் - 94422 92555
சிவ.செல்லப்பாண்டியன் - 93459 45312
நீல.சந்திரகுமார் - 98949 03608
தேவ.இனமுதல்வன் - 97512 66169
வெ.அர்ச்சுணன் - 94438 00518
வேலூர் பிலிப் - 94432 66012
ஆற்காடு.தமிழ்மணி – 94432 94653
10
திருவண்ணாமலை
(1) செங்கம்
வழ.பார்வேந்தன் - 94433 56963
வழ.மோகன் - 98656 91748
பி.கா.அம்பேத்வளவன் - 93446 66951
இரா.தனராசு – 98424 52172
செங்கம்.க.அதியமான் - 98426 03014
நியூட்டன் - 94432 72644
வெற்றிமுரசு – 97874 14589
11
சேலம்
(1)கெங்கவல்லி
இரா.கிட்டு – 99424 99991
நாவரசன் - 94433 07309
வீ.ந.தமிழன் - 97902 37871
தமிழமுதன் -
வீர.ஆதித்யன்
ஜெயசீலன்
சமத்துவன்
(2) ஆத்தூர்
இமயவரம்பன் - 93452 21085
சௌ.பாவேந்தன் - 98943 73452
சி.அங்கப்பன் - 94437 71424
கோ.ஜெயச்சந்திரன் - 97150 41111
கருப்பையா
வை.ஆதவன் 
12
சென்னை (வடக்கு)
(1) திரு.வி.க.நகர்
வன்னிஅரசு – 99657 78041
வழ.ம.கபிலன் - 98410 86049
ச.அம்பேத்வளவன் - 98402 98923
வேல்முருகன் - 98411 16778
ரவிச்சந்திரன் - 94441 74714
பெரம்பூர் ராஜி – 98408 11493
சென்னை முத்து – 99621 05550
13
சென்னை (மத்தி)
(1) திருவல்லிக்கேனி
கு.பாவலன் - 94442 74884
வழ.க.வீரமுத்து – 93810 35324
சைதை எஸ்.எஸ்.பாலாஜி – 90945 54446
வெ.கடம்பன் - 98849 59963
ஜெ.முபாரக்
ஏ.கே.அகமது
14
புதுக்கோட்டை
(1) கந்தவர்க்கோட்டை
கு.அறச்செல்வம் - 95970 37848
எரிச்சி கலைமுரசு - 94428 69746
விடுதலைவேந்தன் - 97501 02332
விடுதலைக்கனல் - 98653 81456
சுப.முத்துக்குமார் - 97500 95505
15
கோவை
(1) அவிநாசி
இலக்கியன் - 94435 06009
சுசிகலையரசன் - 94431 70768
நா.ச.இளவரசன் - 93632 46476
குடியரசு – 98439 49139
கேசவமருகன் - 94869 11020
ம.வீரக்குமார் - 92444 02236
நிலா – 94863 81178
16
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
மு.கலைவேந்தன் - 93645 33985
இன்குலாப் - 93452 04021
மா.இளஞ்சேரன் - 94451 24528
எழில் அமுதன் - 99421 53234
தமிழ்வளவன் - 99948 52250
சதுகிரி
சிவகாசி ராஜா
17
மதுரை
சோழவந்தான்
ஏ.சி.பாவரசு - 94433 37736
மோ.எல்லாளன் - 93447 77276
வெ.கனியமுதன் - 94434 23938
வேல்சாமி (எ) தமிழ்வேந்தன்-99654 48799
க.கலைவாணன் - 98651 49623
அலங்கா.செல்வஅரசு – 96009 40076
அ.ச.அன்பழகன் - 93441 19301
ஊர்சேரி.சிந்தனைவளவன் - 94439 26962
18
தேனி
பெரியகுளம்

திருமா.மூ.பசும்பொன் - 94430 77889
சுப்பிரமணியன் - 98421 02034
இரா.தமிழ்வாணன் - 97891 02292
அ.செல்லபாண்டியன் -
முகமது ரபீக்
முத்து நடராசன் - 97868 41561
நாகரத்தினம்
ரபீக் - 98425 40238

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2011-சட்டமன்றத் தேர்தல்
தொகுதிப் பணிக்குழுக்கள்
புதுச்சேரி மாநிலம்
                       

வ.எண்
தொகுதி
பணிக்குழுவினர்
1
நெட்டப்பாக்கம்
தேபொழிலன்
சிவந்தன்
மலரவன்
கருணாகரன்
சிவக்குமார்
ராசசேகரன்
செம்மலர்
சங்கர்
2
ஊசுடு
அரிமாதமிழன்
விடுதலைவளவன்
கௌதமன்
இளமாறன்
லட்சுமணன்
வெங்கடேஷ்
திருமுகம்
திருமாநம்பி
3
திருபுவனை
அமுதவன்
விடுதலைவளவன்
தமிழ்கனல்
பாண்டியன்
அருள்வேல்
வடிவேல்
முருகன்
4
நெடுங்காடு
செந்தமிழ்செல்வன்
தமிழரசி
அம்பேத்வளவன்
மனவாளன்
தியாகச்சுடர்
5
மனவெளி
தமிழ்மாறன்
இளவரசன்
சுடர்வளவன்
பேரரசன்
இன்பத்தமிழன்
கபிலன்
6
உழவர்கரை
செல்வநந்தன்
தீந்தமிழன்
ஸ்டீபன்
ஆனந்த்
லட்சுமி
வேலு
7
திருநள்ளாறு
அறவன்
பாலு
வல்லவன்
விடுதலைச்செல்வன்
கனல்வேந்தன்
ஷேக்பரீது



Read more...

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP