சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

வீர தமிழா முத்து குமாரா உமக்கு எங்கள் வீரவணக்கம்,விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்காக அல்ல என்றும் தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கொள்கைக்காக பாடுபடும் கட்சி என்று திருச்செந்தூர் வீரவணக்கப் பொதுகூட்டத்தில் தொல்.திருமாவளவன்

Tuesday, February 1, 2011




முதலில் தம்பி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் ,உண்மையான தமிழ் உணர்வாளர் யார் ? என்று தம்பி முத்துக்குமாருக்கு தெரிந்து இருக்கிறது அதனால் தான் சாகும் தருவாயில் கூட நான் இறந்த செய்தியை அண்ணன் பிரபாகரனுக்கும், அண்ணன் திருமாவளவனுக்கும் உடனே தெரியப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு இறந்து போனான்.

தமிழகத்து தம்பி முத்துகுமாருக்கு மேதகு.பிரபாகரனே ஈழத்தில்வீரவணக்கம் செலுத்தினர் அந்தளவிற்கு முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்காக செய்துதிருக்கிற தியாகம் மகத்தானது. ஆனால் இங்குள்ள போலி தமிழ் தேசியவாதிகளும் ,சாதிய தமிழ் தேசியவாதிகளும் ,திருமாவளவனின் மீது சாதி முத்திரையை குத்த முயற்சிக்கிறார்கள். திருமாவளவன் கட்சியை தொடங்கும் போதே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்று தான் பெயர் சுட்டினேன், சாதி ஒழிப்பை கொள்கையாக பிரகடனப்படுத்தினேன். தமிழகத்தில் மற்ற எல்லா தலைவர்களும் சாதி சங்கங்களை ஆரம்பித்து அதன்பின்னர் ஒட்டுக்காக தான் கட்சி பெயரை மாற்றி இருக்கிறார்கள் .எந்த ஒரு கட்சியும் சாதி ஒழிப்பை கொள்கையாக வைத்தது இல்லை திருமாவளவனை தவிர, அதை நான் மார்தட்டி சொல்லுவேன், திருமாவளவனின் மீது கல் எறிபவர்கள், அவதூறு பரப்புகிறவர்கள் ஒரு நாள் திருமாவளவன் உண்மையான தமிழ் தேசியவாதி என்று அவனே திருமாவளவனின் மீது மாலை அணிவிப்பான் அது வரை விடுதலைச்சிறுத்தைகள் பொறுமை காக்கவேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ,பொதுச்செயலாளர் கலைகோட்டுதயம் வன்னிஅரசு, கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மைச்செயலாளர் சங்கத்தமிழன், முகமது யூசப், ஆற்றலரசு, பாவரசு, கலியமுதன், கலைவேந்தன், உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளுமானோர் கலந்துகொண்டனர்..

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP