சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

சிங்களப் படையின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த கச்சத் தீவை மீட்பதும் ஈழ விடுதலையை அங்கீகரிப்பதுமே தீர்வு! எழுச்சித்தமிழர்.தொல்.திருமாவளவன் அறிக்கை!

Friday, January 28, 2011

நாகை மாவட்டம் ஜெகதாபட்டினம் செல்வனேந்தல் குப்பத்தைச் சேர்ந்த தமிழக மீனவ இளைஞர் பாண்டியன் சிங்கள இனவெறிக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1983லிருந்து இதுநாள் வரையில் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினராலும் இந்தியப் படையினராலும் அவ்வப்போது சுட்டுப் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது செல்வனேந்தல் பாண்டியனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்திய அரசு பாராமுகமாக இருந்து சிங்களர்களுக்குத் துணையாகவும், தமிழினத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் இங்கே....

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP