சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

Friday, March 11, 2011


இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
10 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதுமிருந்து 1025 மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. விருப்ப மனுக்களின் விண்ணப்பக் கட்டணம் மூலம் ரூ. 52 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. 

தொல்.திருமாவளவன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அவரது சார்பாக 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 235 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொடுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நக்கீரன்

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP