சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையத்தின் மாநில, மாவட்ட செயற்க்குழு கூட்டம் சென்னை வேளச்சேரி தமிழ்மண் அலுவலகத்தில் நடைப்பெற்றது: தீவிரமாக களப்பணி செய்து காட்சி அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகம் செய்யலாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதை நீங்கள் எல்லோரும் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று தலைவர் தன் நிறைவுரையில் பேசினார்.

Monday, March 7, 2011


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையத்தின் 
மாநில, மாவட்ட செயற்க்குழு கூட்டம்.
சென்னை வேளச்சேரி தமிழ்மண் அலுவலகத்தில் நடைப்பெற்றது. 
இதனை ஊடக மையத்தின் மாநில செயலாளர் அறிவமுதன் தலைமை தாங்கினார். 
இந்த செயற்குழு கூட்டம் காலை முதல் மாலை வரை நடைப்பெற்றது. 
இந்த அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் கட்சியின் ஊடகத்தை 
எப்படியெல்லாம் வழிமுறை செய்து அதனை வலிமைப் படுத்த வேண்டும் 
என்று ஒவ்வொரு ஊடக பொறுப்பாளர்கள் தங்களின் கருத்துகளை 
பதிவு செய்தார்கள். 
தங்களால் ஆன பணிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 
களப்பணி ஆற்றுவோம் என உறுதியளித்தார்கள். 
மாநில செயலாளர் அறிவமுதன் பேசும்பொழுது,
ஒரு கட்சியை வலிமைப் படுத்துவது ஊடகம் தான் 
இதில் ஊடகத்தைச் சார்ந்த அனைவரும் முழு அர்ப்பணிப்போடு 
செயல்பட வேண்டும், ஊடகம் தான் கட்சியின் முதுகு எலும்பாக செயல் படவேண்டும். 
வருகின்ற தேர்தல் வெற்றிக்கு நமது ஊடகம் தான் முக்கியமான காரணம் 
என்பதை நிலை நாட்டவேண்டும். 
அதற்கான செயல் திட்டத்தை வரையறுத்து செயல்பட வேண்டும் என்று பேசினார். 
சிறப்பு அழைப்பாளர்கள் கௌதம சன்னா, பாவலன் சேகுவேரா ஆகியோர் 
கலந்து கொண்டு ஒருசில கருத்துக்களை கூறினார்கள்..
பாவலன் பேசும் பொழுது: தலைவர் அவர்கள் ஒரு தலித் 
தலைவராக இருக்கின்ற காரணத்தினால் நாம் எவ்வளவு 
பெரிய கருத்துக்களை முன் வைத்தாலும் மாற்று ஊடகத்தில் 
அத்தகைய கருத்துக்களை பதிவு செய்வதில்லை, 
ஆக நமது ஊடகத்தை வலிமைப் படுத்த வேண்டும் என பேசினார். 
கௌதம சன்னா பேசும் போது: இன்றைய காலம் கணினி உலகம்,என்று 
சொல்லக் கூடிய அளவிற்கு கணினி வளர்ந்து இருக்கிறது.
அச்சு ஊடகத்தை வலிமைப் படுத்துவதை விட இணைய தளத்தை 
வலிமைப்படுத்த வேண்டும், வருகின்ற தேர்தலில் ஊடக மையப் 
பொறுப்பாளர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்து இருக்கின்ற
 10 தொகுதிகளிலும் கிராமம் கிராமமாக சென்று தலைவரின் 
பேச்சுகளை ,கட்சியின் பாடல்களை திரைகட்டி போட்டுக் காட்டி பிரச்சாரம் 
செய்யவேண்டும் என பேசினார். 
இறுதியில் கலந்துகொண்டு பேசிய எழுச்சித்தமிழர் அவர்கள் நமது கட்சியில் 
எத்தனையோ துணைநிலை அமைப்புகள் இருந்தாலும் 
அவர்களை விட நீங்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும்,
ஈழத்திலே மேதகு.பிரபாகரன அவர்களும் அவர்களின் போராளிகளும் 
எதிரிகளோடு போரிட்டு கொண்டு இருப்பார்கள். 
அவர்களின் ஊடகம் தன் உயிரை கூட பொறுபடுத்தாமல் 
தீவிரமாக களப்பணி செய்து காட்சி அனைத்தையும் பதிவு செய்வார்கள்.
அப்படிப்பட்ட செயல்வீரர்களாக வளரவேண்டும். 
விடுதலை புலிகளின் ஊடகம் போன்று 
விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகம் செய்யலாற்ற வேண்டும் 
என்பது என்னுடைய விருப்பம் அதை நீங்கள் எல்லோரும் 
முன்னெடுத்து செல்லவேண்டும் என்று தலைவர் தன் நிறைவுரையில் பேசினார்.

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP