சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

அண்ணனின் வரலாற்று ஒளி ஒலி பதிவை சேரிதொரம் projector வைத்து ஒளிபரப்புவோம், வீடு வீடாக சென்று அமர்ந்து சந்தையிடுவது போல நமது கொள்கைகளை சந்தையிட்டு வாக்குகளை பெறுவோம்.-மனமை அரங்கநாதன்

Saturday, March 19, 2011

தோழர்கள் ஆதங்கம் வரவேற்க தக்கது மாற்று அரசியல் கட்சிகளிடம் ஏன் ஒரு பொது தொகுதியில் தலித்துக்களை நிற்க வைக்க வில்லை என்று கேட்கலாம் ஆனால் சாதி ஒழிப்பை தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்ற சிறுத்தைகள் நமது தலைவரிடம் இந்த கேள்வியை கேட்க கூடாது ஏன் என்றால் ஆண்டாண்டு காலமாக நம்மை தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்த சாதி கட்டமைப்புகளை எல்லாம் உடைத்து எரிந்து நம்மோடு கைகோர்த்து அண்ணனின் தலைமையை ஏற்று களப்பணி யாற்றுகின்ற மாற்று சமூக தோழர்களை நாம் உற்சாக படுத்த நமக்கான அரசியலில் அவர்களையும் பங்கெடுக்க வைப்பதே நமக்கு பெருமை, சென்ற காலங்களில் அரசியல் தெரியாமல் இருந்தும், அதன் பின்னர் அரசியலில் புறக்கநிக்கபட்டோம், அதற்கும் அடுத்து வெறும் வாக்காளர்கலாகவும், பிரதிநிதிகளாகவும் இருந்தும் அண்ணனின் காலத்தில் தனி இயக்கம் கண்டோம் தனி தொகுதி கண்டோம் இப்பொழுது நமக்கு கிடைத்ததை பகிர்ந்தளிக்கும் நிலையில்,  யார் நம்மை தடை செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து தமிழ் தேசிய களத்தில்  களமாடி  அரசியல் களத்தில் ஒன்றிணைந்து செயல்படும் நிலைக்கு
வந்துள்ளோம் திருமாவின் காலம் இருக்கும் பொழுதே பெண்ணை கொடுத்து பெண்ணை எடுக்கும் காலம் விரைவில் வரும் சமூக மறுமலர்ச்சி ஏற்படும், நமக்கு கிடைக்க வேண்டியது அதிகாரம் அரசியல் சுதந்திரம் சமூக மாற்றம் எனவே உனக்கு எனக்கு தலித்திற்கு என்று பிடிவாதமாக இல்லாமல் யாருக்கு கொடுத்தாலும் பத்தும் வெற்றிபெற கடுமையாக உழைப்போம், தமிழர்கள் ஒன்றுபடவேண்டியத்தை பரப்புரையாக செய்வோம், கலைஞர் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதனை சொல்லுவோம், நமது தொகுதி வேட்பாளர் எப்படி பட்ட நற்குணம் மிக்கவர் என்பதை சொல்லுவோம் அண்ணனின் வரலாற்று ஒளி ஒலி பதிவை சேரிதொரம் projector வைத்து ஒளிபரப்புவோம், வீடு வீடாக சென்று அமர்ந்து சந்தையிடுவது போல நமது கொள்கைகளை சந்தையிட்டு வாக்குகளை பெறுவோம்.



மனமை அரங்கநாதன்

0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP