சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

வெற்றிப்பாதையில்...விடுதலை சிறுத்தைகள்...வேங்கை சு.செ.இப்ராஹீம்.

Wednesday, March 9, 2011


தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள
நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணிகளை
ஏறக்குறைய உறுதிசெய்துவிட்டன. ஆளும் திமுக தரப்பிலும் அதிமுக
தரப்பிலும் பல கூட்டனிகட்சிகளுடன் தொகுதி பங்கீடே முடிந்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு
பத்து சட்டமன்ற தொகுதிகளை பெற்று தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கிறது.வெறும் பத்து தொகுதிகளை கொடுத்து திமுக திருமாவை ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியின் மீதும் திருமா அவர்கள் மீதும் அபிமானம் கொண்ட அணைத்து தரப்பினரும் விவாதித்து வருகிறார்கள்...

மேலோட்டமாக பார்பவர்களுக்கு திருமாவை திமுக ஏமாற்றிவிட்டதாகவே தோணும்...ஆனால் சில விசயங்களை மீளாய்வு செய்து சில கடந்த கால சம்பவங்களை உள்வாங்கி நிதர்சனமாக பார்த்தல் பத்து தொகுதிகளை ஒப்புக்கொண்ட தோழர்.திருமாவின் சாதுரியம் விளங்கும்.

ஆரம்ப காலத்தில் தலித் பாந்தர் இயக்கமாக அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகளாக அரசியலையே புறக்கணித்து வந்த திருமா இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறார் என்பதே உண்மை... விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசியல் களத்திற்கு வந்த காலம் முதல் படிபடியாக வளர்ந்தே வருகிறர்கள் இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர்களின் கைகள் ஓங்கியே நிற்கிறது.

தீர்க்கமான களபனியும் மூர்க்கமான கொள்கைபிடிப்பும் எதார்த்தமான தூரநோக்கு பார்வையும் கொண்ட தோழர்.தொல்.திருமாவளவன் தன்னை உருவாக்கிய தலித் சமூக மக்களை சரியான இலக்கை நோக்கியே நகர்த்தி வருகிறார். அடக்கி ஆளப்பட்ட சமூகத்தை ஆளக்கூடிய சமூகமாக மற்றும் முயற்சிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

2001 சட்டமன்ற தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட சிறுத்தைகள் 2006 சட்டமன்ற தேர்தலில் ஒன்பது இடங்களில் போட்டியிட்டது. இப்போது 2011 சட்டமன்ற தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த நிலையை வளர்ச்சி என சொல்லாமல் வேறு என்னவென்பது.

ஆதிக்க சாதிகளின் ஆளுமையில் இருந்த தமிழக அரசியல் களத்தை சிறுத்தைகள் மாற்றி வருகிறார்கள் என்பதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை சொந்த சின்னத்தில் போட்டியிட்டு சிதம்பரத்தில் வெற்றியையும் விழுப்புரத்தில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பையும் இழந்தது மகத்தான அத்தாட்சி...

சாதி என்கிற குறுகிய வட்டத்துக்குள் கட்சியை அடைத்துவிடாமல் வெகுஜன மக்களின் அங்கீகாரத்தையும் கருத்தில்கொண்டு இன்று சிறுத்தைகள் இஸ்லாமிய மக்களையும் சில பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும் தங்களின் பயணத்தில் இணைத்துகொண்டு வெற்றிகரமாக பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் ஜீவாதார உரிமையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி பலவிதமான செயல்பாடுகளை நிகழ்த்திவரும் சிறுத்தைகளை முஸ்லிம்கள் கவனிக்க தவறவில்லை என்பதற்கு சிறுத்தைகளின் உட் பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் கிளைகள் வெகுவாக வளர்ந்துவருவதே சாட்சி...

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பை கண்டித்து சென்னையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் முதல் நபராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய தோழர்.திருமாவை முஸ்லிம்கள் இன்று நட்போடும் நம்பிக்கையோடும் பார்க்க துவங்கியுள்ளார்கள் என்பது மிகையல்ல... அதேபோல சென்னை மக்கா பள்ளியில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகஏற்றுக்கொண்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எந்த அரசியல் மாச்சரியங்களுக்கும் அஞ்சாமல் துணிவுடன் தனது கருத்துகளை எடுத்துரைத்த தோழர்.திருமா அவர்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் மரியாதையுடனே நட்பு பாராட்டி வருகிறார்கள்.

2011 ஆம் ஆண்டை விடுதலை சிறுத்தைகள் ஆண்டென பிரகடனம் படுத்தியுள்ள திருமாஎதிர்வரும் 2016 ஆம் ஆண்டை தலித்கள் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்த அரசியல் எழுசியாண்டாக பிரகடன படுத்தியுள்ளார். ஆதிக்க சக்திகளால் அடிமைபடுதப்பட்ட தலித் மக்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்"ஆதிக்க வர்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி முஸ்லிகள் தங்களை தாங்களே "தாழ்த்திகொண்டவர்கள்"

தாழ்த்தப்பட்டவர்களும் தாழ்த்திகொண்டவர்களும் கைகோர்த்து களமாடினால் நாளை தமிழகத்தின் வரலாறை நமது வருங்காலமே தீர்மானிக்கும்.

இந்த சட்டமன்ற தேர்தல் களம் சிறுத்தைகளின் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெரும் யுத்தகளம்... அதே வேளையில் தோழர்.திருமா முன்னெடுத்து செல்லும் முஸ்லிம்கள் தலித்துக்கள் ஒருங்கிணைந்த அரசியலுக்கான அடித்தளம்...
வியூகம் அமைப்பதில் விவேகமான தோழர்.திருமா அவர்களின் சிறுத்தைகள் கவனமுடன் களமாடினால் நிச்சயமாக பத்துக்கு பத்தும் வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை...





0 comments:

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP