சர்வதேச சிறுத்தைகளின் இணைய குழுமம்

.

*

டாக்டர்.தொல்.திருமாவளவன் எம்.பி

தலைவர் திருமாவின் உழைப்பும் ,சமூக பங்களிப்பும் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ ஊடகவியலாரான உங்களுக்கும் , மனசாட்சிக்கும் தெரியும் என கருதுகிறேன் -கல்லை நகர் தமிழினியன் @ தனசேகர்.

Saturday, March 12, 2011

தலைவர் திருமா ,சில ,பல நேரங்களில் ,விருபினாலும் ,விரும்பாவிட்டாலும் ,கண்ணியம் ,அனுசரித்தல் ,சகித்து கொள்ளுதல் போன்ற உத்தியை கையாள கடமைப்பட்டவராக இருக்கிறார் .ஒரு இயக்கம் ,அமைப்பாய் இருக்கிற போது இருந்த சுதந்திரம் ,தற்போது அவருக்கு இல்லை என்பதே உண்மை ,தெரிந்தே அவர் சகித்து கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை .இதில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும் தலைவர் திருமா இடத்தில் நீங்களோ ,நானோ இருந்தால் கூட இது நிகழ்ந்துதான் இருக்கும் .வேறு எந்த தலித் அமைப்பும் எட்டாத பரந்த பரப்பை கட்டியமைதவர் தலைவர் திருமா ,வேறு எந்த தலித் கட்சியும் தமிழ்நாட்டில் இத்தனை வலுவானதாக இருக்கவில்லை .உங்களுக்கே தெரியும் வெறும் திறமை உள்ளவர் மட்டும் ,அறிவாளி மட்டும் ,பலசாலி மட்டும் ,பணவாதி மட்டும் ஜெயித்து விடுவதில்லை ,சமயோசித புத்தி ,சகிப்பு தன்மை ,விட்டுகொடுத்தல் ,கண்ணியம் காத்தல் இப்படி எத்தனனயோ ...., இருக்கின்றன ! காங்கிரஸ் துதி பாடினார் என்கிறீர்கள் , கூட்டணி தர்மத்தில் ,அவருக்கும் தர்ம சங்கடம் .அதையும் மீறி ,இலங்கை தமிழருக்காய் எழ வேண்டிய நேரத்தில் எழவில்லையா ? கலைஞரும் ,சோனியாவும் ,தலைவர் திருமா மேல் வருத்தம்தான் பட்டார்கள் .ஒரு சிறு பிள்ளை போல் போசுகென்று கோபித்து கொண்டு வந்துவிட முடியுமா ? வெறும் கோபத்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும் .அவர்களை நாசுக்காக கையாண்டுதான் நம் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள முடியும் .தோழர் நீங்கள் நன்கு அறிந்தது தான் ,தலித்துகளையும் ,தலித்துகளின் கோரிக்கைகளையும் எந்த அரசு மதிக்கிறது .நாம் இன்னும் பலம் பெற வேண்டும் ,அதற்கு சில நேரங்களில் மௌனம் காக்க வேண்டிதான் உள்ளது .அதிகாரம் நம்கைக்கு வருகிற போது தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் .அதையும் விடுங்கள் புலிகளுக்காக இந்த எலிகள் ஒரு துரும்பை கூட எடுத்து எடுத்து போடா வில்லை என்று கருதுகிறீர்களா ? தலைவர் திருமாவின் உழைப்பும் ,சமூக பங்களிப்பும் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ ஊடகவியலாரான உங்களுக்கும் , மனசாட்சிக்கும் தெரியும் என கருதுகிறேன் 


தனசேகர் @ தமிழினியன்
மாநில நிர்வாகி-வி.சி.க
கள்ளக்குறிச்சி

1 comments:

பாரி.செழியன் March 19, 2011 at 10:28 AM  

அனைவரும் வெற்றி பெற
வாழ்த்துக்கள்
பாரி செழியன்

Post a Comment

  © Dr.Thol.Thirumavalavan International Network 2010 *திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது ! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

Back to TOP